கோவை: கோவையில் இருந்து பொள்ளாச்சி வரை இயக்கப்படும் அரசு பேருந்துகளில் ரூ. 3 கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவையில் இருந்து பொள்ளாச்சி வரை இயக்கப்படும் அரசு பேருந்துகளில் ரூ. 3 கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
உக்கடம் - ஆத்துபாலம் இடையே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் அரசு, தனியார் மற்றும் கல்லூரி பேருந்துகள் அனைத்தும் ஒரு வழிப்பாதையாக இயக்கப்பட்டு வருகிறது. ஆத்துபாலத்திலிருந்து புட்டு விக்கி லேக், செல்வபுரம், மீன்மார்க்கெட் வழியாக உக்கடம் பேருந்து நிலையம் வர உத்தரவிடப்பட்டுள்ளது. உக்கடத்திலிருந்து ஆத்துபாலம் செல்ல வழக்கம் போல் கரும்புக்கடை வழியே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, ஆத்துப்பாலத்திலிருந்து உக்கடம் பேருந்து நிலையம் வர வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் சுமார் 5 கி.மீ., தூரம் வரை சுற்றி வர வேண்டிய சூழ்நிலையுள்ளது. இதனைப் பயன்படுத்தி பயணிகளிடம் அரசுப் பேருந்து நிர்வாகம் ரூ. 3 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கோவை - பொள்ளாச்சி இடையே சாதாரண கட்டணமாக ரூ. 25-ம், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ரூ. 33-ம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சாதாரண பேருந்துகளில் ரூ. 28 வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கட்டண உயர்வு குறித்து பொள்ளாச்சி செல்லும் பயணிகள் நம்மிடம் கூறுகையில், "வியாழக்கிழமை கட்டண உயர்வு இருந்தது. இன்று அது இல்லை. அதேசமயம், சில பேருந்துகளில் மட்டும் இந்தக் கட்டண உயர்வு உள்ளது. தனியார் பேருந்துகளில் இது இல்லை," எனக் கூறினர்.
இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரியிடம் கேட்ட போது, பேருந்துகளில் கட்டண உயர்வு ஏற்றப்படவில்லை, என்றார்.
உக்கடம் - ஆத்துபாலம் இடையே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் அரசு, தனியார் மற்றும் கல்லூரி பேருந்துகள் அனைத்தும் ஒரு வழிப்பாதையாக இயக்கப்பட்டு வருகிறது. ஆத்துபாலத்திலிருந்து புட்டு விக்கி லேக், செல்வபுரம், மீன்மார்க்கெட் வழியாக உக்கடம் பேருந்து நிலையம் வர உத்தரவிடப்பட்டுள்ளது. உக்கடத்திலிருந்து ஆத்துபாலம் செல்ல வழக்கம் போல் கரும்புக்கடை வழியே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, ஆத்துப்பாலத்திலிருந்து உக்கடம் பேருந்து நிலையம் வர வழிமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் சுமார் 5 கி.மீ., தூரம் வரை சுற்றி வர வேண்டிய சூழ்நிலையுள்ளது. இதனைப் பயன்படுத்தி பயணிகளிடம் அரசுப் பேருந்து நிர்வாகம் ரூ. 3 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கோவை - பொள்ளாச்சி இடையே சாதாரண கட்டணமாக ரூ. 25-ம், எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ரூ. 33-ம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சாதாரண பேருந்துகளில் ரூ. 28 வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கட்டண உயர்வு குறித்து பொள்ளாச்சி செல்லும் பயணிகள் நம்மிடம் கூறுகையில், "வியாழக்கிழமை கட்டண உயர்வு இருந்தது. இன்று அது இல்லை. அதேசமயம், சில பேருந்துகளில் மட்டும் இந்தக் கட்டண உயர்வு உள்ளது. தனியார் பேருந்துகளில் இது இல்லை," எனக் கூறினர்.
இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரியிடம் கேட்ட போது, பேருந்துகளில் கட்டண உயர்வு ஏற்றப்படவில்லை, என்றார்.