திருப்பூர்: தமிழகத்திலேயே திருப்பூர் மாநகராட்சியில் தான் முதன்மையாக பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: தமிழகத்திலேயே திருப்பூர் மாநகராட்சியில் தான் முதன்மையாக பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவர்களுடனான வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், திருப்பூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், மேம்பால பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும், திருப்பூர் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. தமிழகத்தில் மற்ற மாநகராட்சிகளோடு ஒப்பிடுகையில் திருப்பூர் மாநகராட்சி தான் முதன்மையாக பணிகளை மேற்கொள்கிறது. இதனை வலியுறுத்தும் வகையிலேயே ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது." என்றார்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவர்களுடனான வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், திருப்பூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், மேம்பால பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும், திருப்பூர் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. தமிழகத்தில் மற்ற மாநகராட்சிகளோடு ஒப்பிடுகையில் திருப்பூர் மாநகராட்சி தான் முதன்மையாக பணிகளை மேற்கொள்கிறது. இதனை வலியுறுத்தும் வகையிலேயே ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது." என்றார்.