''இன்றைய அறிவியல் நாளைய தொழில் நுட்பம்" - நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சண்முகப்ரியா

நீலகிரி: ஊட்டியில் உள்ள கிரஸண்ட் கேஸில் பள்ளியில் இளம் அறிவியலாளர்களுக்கான இரண்டு நாள் சிறப்பு முகாம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சியை நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சண்முகப்ரியா தொடங்கி வைத்தார்.



நீலகிரி: ஊட்டியில் உள்ள கிரஸண்ட் கேஸில் பள்ளியில் இளம் அறிவியலாளர்களுக்கான இரண்டு நாள் சிறப்பு முகாம் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இக்கண்காட்சியை நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சண்முகப்ரியா தொடங்கி வைத்தார்.

இளம் அறிவியலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க வலியுறுத்தியும் ஆண்டுதோறும் நடத்தப்படும் இளம் அறிவியலாளர்களுக்கான 2 நாள் சிறப்பு முகாம் உதகையில் உள்ள கிரஸண்ட் கேஸில் பள்ளியில் நேற்று தொடங்கியது.



ஒன்றாம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் பங்கேற்றுள்ள இந்த அறிவியல் கண்காட்சியில் மாணவர்களின் பல்வேறு படைப்புகளைத் தவிர, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள படைப்புகள், கண்காட்சி குறித்த விளக்கக் கூட்டமும் நடைபெற்றது. 

இதில் நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சண்முகப்ரியா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''இன்றைய அறிவியல் நாளைய தொழில் நுட்பம்; இளம் விஞ்ஞானிகளுக்கு அது மிகப்பெரிய உயரத்தை அடைய உதவுகிறது. அறிவியல் கண்காட்சி, வெவ்வேறு துறைகளில் உள்ள திறமைகளை மாணவர்கள் மூலம் வெளி கொண்டு வர வழிவகை செய்கிறது.'' என்றார்.



பள்ளி தாளாளர் உமர் பரூக் பேசுகையில், ''இந்த கண்காட்சியில் தேர்வு பெறும் முதல் மூன்று படைப்புகள், மாநில மற்றும் தேசிய அறிவியல் போட்டிக்கு விரைவில் அனுப்பப்படும்.'' என்றார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...