அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய பொதுக்கழிப்பறையை பார்வையிட்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோவை: கோவை மகளிர் பாலிடெக்னிக் அருகே அதிநவீன வசதிகளுடன் இலவச பொதுக் கழிப்பிடம் கட்டும் பணிகள் முடிவுற்றுள்ளதையடுத்து, அதனை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை: கோவை மகளிர் பாலிடெக்னிக் அருகே அதிநவீன வசதிகளுடன் இலவச பொதுக் கழிப்பிடம் கட்டும் பணிகள் முடிவுற்றுள்ளதையடுத்து, அதனை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், பாலசுந்தரம் செட்டியார் சாலை மகளிர் பாலிடெக்னிக் அருகில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.98 லட்சம் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் இலவச பொதுக் கழிப்பிடம் கட்டும் பணிகள் முடிவுற்றுள்ளது. இந்த நவீன பொதுக்கழிப்பிடத்தின் பணிகள் முடிவுற்றுள்ளதை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



நவீன பொதுக் கழிப்பிடத்தில் ஆண்கள், பெண்களுக்கான தனித்தனி குளியலறைகள், கழிப்பறைகள் மற்றும் கை கழிவுமிடங்களில் தண்ணீர் வசதிகள், மின் விளக்குகள் சரியாக செய்யப்பட்டுள்ளதையும், நவீன கழிப்பிடத்தின் வளாகத்தில் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருவதையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது துணை ஆணையாளர் ப.காந்திமதி, உதவி ஆணையாளர் கே.ரவிக்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...