நீலகிரி: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள 12-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயற்சித்த போது லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
நீலகிரி: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள 12-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயற்சித்த போது லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இன்று காலை 10 மணியளவில் நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் அருகே சென்னையில் இருந்து ஊட்டிக்கு புல் கட்டுகள் ஏற்றி வந்த லாரி 12-வது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், லாரியில் இருந்த ஓட்டுனர் மற்றும் கிளீனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது.
இதனால், அவ்வழியாகச் சென்ற அனைத்து வாகனங்களும் கோத்தகிரி-ஊட்டி சாலை வழியாக திருப்பி விட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்பு படையினர், தற்போது லாரியை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக மழை பெய்து வரும் சூழலில் அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.