குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 12-வது கொண்டை ஊசி வளைவில் லாரி கவிழ்ந்து விபத்து

நீலகிரி: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள 12-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயற்சித்த போது லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.


நீலகிரி: குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள 12-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயற்சித்த போது லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இன்று காலை 10 மணியளவில் நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மரப்பாலம் அருகே சென்னையில் இருந்து ஊட்டிக்கு புல் கட்டுகள் ஏற்றி வந்த லாரி 12-வது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.



இந்த விபத்தில், லாரியில் இருந்த ஓட்டுனர் மற்றும் கிளீனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால், அவ்வழியாகச் சென்ற அனைத்து வாகனங்களும் கோத்தகிரி-ஊட்டி சாலை வழியாக திருப்பி விட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்பு படையினர், தற்போது லாரியை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக மழை பெய்து வரும் சூழலில் அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...