கோவை: கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி கொடுக்கும் போது, பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி மாடியில் இருந்து பயிற்சியாளர் தள்ளியதில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை: கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி கொடுக்கும் போது, பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி மாடியில் இருந்து பயிற்சியாளர் தள்ளியதில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை அருகே நரசீபுரம் பகுதியில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் இன்று மாலை 4 மணி அளவில் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியானது நடைபெற்றது. தேசிய பேரிடர் மேலாண்மையை சேர்ந்த பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர் 20 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார்.
கல்லூரியின் 2-வது மாடியில் இருந்து மாணவர்கள், மாணவிகள் கீழே விரிக்கப்பட்ட வலையில் குதித்து பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது , பி.பி.ஏ., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி லோகேஸ்வரி (18) என்பவர் மாடியில் இருந்து குதிக்க பயந்தபடி அமர்ந்திருந்தார். அவரை கீழே குதிக்கும்படி தெரிவித்த பயற்சியாளர் ஆறுமுகம், திடீரென மாணவியை கீழே தள்ளிவிட்டார். அப்போது, எதிர்பாராதவிதமாக முதலாவது மாடியின் சன்-சேடில் மாணவியின் கழுத்து பகுதி மோதி பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, மாணவி லோகேஸ்வரி சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியில் மாணவின் உயிர் பிரிந்தது. ஆலாந்துறை காவல்நிலைய போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி லோகேஸ்வரியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.