கோவை: கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியதை ரத்து செய்யக்கோரி, தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கோவை: கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியதை ரத்து செய்யக்கோரி, தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

கோவை மாநகராட்சி குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியது தொடர்பாக வடகோவை பகுதியில் உள்ள தி.மு.க., அலுவலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தி.மு.க., காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம்., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர். இதில், சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி, தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது என முடிவெடுக்கப்பட்டது.
மேலும், வருகின்ற 31-ம் தேதி மாநகராட்சி அலுவலகத்தை அனைத்துக் கட்சிகள் சார்பில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது, வருகின்ற 20 முதல் 23-ம் தேதி வரை மாநகராட்சி பகுதிகளில் கூட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கோவை மக்களின் கருத்துக்களை கேட்காமல் குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இத்திட்டம் குறித்து பேசினாலே கைது செய்வோம் என மாநகராட்சி அடக்குமுறையை கடைபிடிக்கிறது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் வரை போராட்டங்களில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.

கோவை மாநகராட்சி குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியது தொடர்பாக வடகோவை பகுதியில் உள்ள தி.மு.க., அலுவலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடந்தது. சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தி.மு.க., காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம்., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர். இதில், சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி, தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது என முடிவெடுக்கப்பட்டது.
மேலும், வருகின்ற 31-ம் தேதி மாநகராட்சி அலுவலகத்தை அனைத்துக் கட்சிகள் சார்பில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது, வருகின்ற 20 முதல் 23-ம் தேதி வரை மாநகராட்சி பகுதிகளில் கூட்டங்கள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. கோவை மக்களின் கருத்துக்களை கேட்காமல் குடிநீர் விநியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இத்திட்டம் குறித்து பேசினாலே கைது செய்வோம் என மாநகராட்சி அடக்குமுறையை கடைபிடிக்கிறது. இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யும் வரை போராட்டங்களில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்தனர்.