நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே ஆண் யானையிடம் சண்டையிட்ட பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே ஆண் யானையிடம் சண்டையிட்ட பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சீகூர் வனப்பகுதியில் கெத்ரல்லா ஆற்றின் ஓரம் யானை ஒன்று இறந்து கிடப்பதை வேட்டைத் தடுப்பு காவலர்கள் பார்த்தனர். பின்னர், இது குறித்து வனஅதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், ரேஞ்சர் செல்வம் மற்றும் கால்நடை மருத்துவர் ராஜமுரளி ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து, 20 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் யானைக்குப் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது "இப்போது இனப்பெருக்க காலம் என்பதால் யானைகள் இடம் பெயர்வது நடந்து வருகிறது. இதனால், பல ஆண் யானைகள் இந்த வனப்பகுதிக்கு வந்துள்ளன. புதிதாக வரும் யானைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்ளும். அப்படித்தான் இந்தப் பெண் யானை இறந்துள்ளது," என்றனர்.
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சீகூர் வனப்பகுதியில் கெத்ரல்லா ஆற்றின் ஓரம் யானை ஒன்று இறந்து கிடப்பதை வேட்டைத் தடுப்பு காவலர்கள் பார்த்தனர். பின்னர், இது குறித்து வனஅதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், ரேஞ்சர் செல்வம் மற்றும் கால்நடை மருத்துவர் ராஜமுரளி ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். தொடர்ந்து, 20 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் யானைக்குப் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது "இப்போது இனப்பெருக்க காலம் என்பதால் யானைகள் இடம் பெயர்வது நடந்து வருகிறது. இதனால், பல ஆண் யானைகள் இந்த வனப்பகுதிக்கு வந்துள்ளன. புதிதாக வரும் யானைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொள்ளும். அப்படித்தான் இந்தப் பெண் யானை இறந்துள்ளது," என்றனர்.