கோவை: பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க வலியுறுத்தி கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டுநலப் பணித் திட்ட மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கோவை: பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க வலியுறுத்தி கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டுநலப் பணித் திட்ட மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டுநலப் பணித் திட்டத்தின் சார்பில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் சீரநாயக்கன்பாளையத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை தவிர்த்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் எடுத்துரைக்கும் வகையில், பதாதைகளுடன் மாணவர்கள் பேரணி சென்றனர்.
இதில், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மூ. ரா. பாக்கியவதி, நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்களான பா. கலையரசன், பொ.விஜயகுமாரி மற்றும் சீரநாயக்கன்பாளைய மக்கள் பிரதிநிதிகளான ஜெயந்தி, கணேஷன் மற்றும் நாகராஜன் ஆகியோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டுநலப் பணித் திட்டத்தின் சார்பில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் சீரநாயக்கன்பாளையத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் கலந்து கொண்டனர். பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனை தவிர்த்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தைப் பற்றியும் எடுத்துரைக்கும் வகையில், பதாதைகளுடன் மாணவர்கள் பேரணி சென்றனர்.
இதில், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மூ. ரா. பாக்கியவதி, நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்களான பா. கலையரசன், பொ.விஜயகுமாரி மற்றும் சீரநாயக்கன்பாளைய மக்கள் பிரதிநிதிகளான ஜெயந்தி, கணேஷன் மற்றும் நாகராஜன் ஆகியோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.