கோவையின் வெவ்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது

கோவை: மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இரண்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

கோவை: மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இரண்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

சிங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி, பீளமேடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி மற்றும் சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் சங்கிலி பறிப்பு வழக்குகள் நிலுவையில் இருந்தது.

இந்த வழக்குகளில், தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க கோவை மாநகர காவல் துறை ஆணையர் பெரியய்யா உத்தரவிட்டார். அதன்படி, துணை ஆணையர் (குற்றப்பிரிவு) மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் அன்பரசு மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் சங்கிலி பறிப்பு தொடர்பாக வாகன தணிக்கை மற்றும் விசாரணைகளில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல், தனிப்படையினர் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர்.

இதில் மோட்டார் சைக்கிளில் வரும் நபர்கள் இரண்டு பெண்களிடம் நகை பறித்ததுச் சென்றது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று காளப்பட்டி சாலையில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக ஒரு சொகுசு காரில் வந்தவர்களை நிறுத்தி போலீசார் விசாரித்தனர்.

இதில் இருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களிடம் தனிப்படையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் போத்தனூர் இட்டேரி பகுதியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரது மகன் ஷாஜகான் (20), நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (27), என்பதும் தெரியவந்தது.

இவர்கள் இருவரும் கூட்டாக சேர்ந்து கோவை பகுதியில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டதுடன் குமரி மாவட்டத்தில் ஒரு வீட்டில் இருந்து புதிய காரை திருடியதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இரண்டு நபர்களையும் விசாரித்ததில் ஷாஜகான் நகை திருடுவதில் கில்லாடி என்பதும், அவர் மீது கோவை மாநகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. அதேபோல ரகு வீடு புகுந்து திருடுவதில் கைதேர்ந்தவராக இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 25 பவுன் நகைகள் ஒரு சொகுசு கார், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனுடைய மொத்த மதிப்பு ரூ.25 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...