கூடலூர் பகுதியில் தொடர் கன மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி: கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி: கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் கோட்டத்திலுள்ள கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், சிற்றாறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

தாழ்நிலங்கள் முற்றிலும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. கனமழை இடைவிடாது பெய்வதால், கடும் குளிர் நிலவுகிறது. நேற்று காலை நிலவரப்படி, கூடலூரில் 78 மி.மீ மழையும் தேவாலாவில் 107 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

ஓவேலி பேரூராட்சியிலுள்ள பார்வுட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக,  ராட்சதப் பாறை உருண்டு சாலையில் விழுந்தது. இதனால் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. ஓவேலி பேரூராட்சிப் பணியாளர்கள் பொதுமக்கள் உதவியுடன் அந்த சாலையைச் சீரமைத்தனர்.

மீட்புப் பணிகளை கூடலூர் வட்டாட்சியர் ரவிகுமார் நேரில் ஆய்வு செய்தார். நீண்ட நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது. பல இடங்களில் குடியிருப்புப் பகுதியில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான தொடர் மழை காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் வீட்டினுள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...