நீலகிரி: கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி: கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் கோட்டத்திலுள்ள கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், சிற்றாறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தாழ்நிலங்கள் முற்றிலும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. கனமழை இடைவிடாது பெய்வதால், கடும் குளிர் நிலவுகிறது. நேற்று காலை நிலவரப்படி, கூடலூரில் 78 மி.மீ மழையும் தேவாலாவில் 107 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
ஓவேலி பேரூராட்சியிலுள்ள பார்வுட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக, ராட்சதப் பாறை உருண்டு சாலையில் விழுந்தது. இதனால் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. ஓவேலி பேரூராட்சிப் பணியாளர்கள் பொதுமக்கள் உதவியுடன் அந்த சாலையைச் சீரமைத்தனர்.
மீட்புப் பணிகளை கூடலூர் வட்டாட்சியர் ரவிகுமார் நேரில் ஆய்வு செய்தார். நீண்ட நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது. பல இடங்களில் குடியிருப்புப் பகுதியில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான தொடர் மழை காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் வீட்டினுள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் கோட்டத்திலுள்ள கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், சிற்றாறுகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தாழ்நிலங்கள் முற்றிலும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. கனமழை இடைவிடாது பெய்வதால், கடும் குளிர் நிலவுகிறது. நேற்று காலை நிலவரப்படி, கூடலூரில் 78 மி.மீ மழையும் தேவாலாவில் 107 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
ஓவேலி பேரூராட்சியிலுள்ள பார்வுட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக, ராட்சதப் பாறை உருண்டு சாலையில் விழுந்தது. இதனால் சாலையில் போக்குவரத்து தடைபட்டது. ஓவேலி பேரூராட்சிப் பணியாளர்கள் பொதுமக்கள் உதவியுடன் அந்த சாலையைச் சீரமைத்தனர்.
மீட்புப் பணிகளை கூடலூர் வட்டாட்சியர் ரவிகுமார் நேரில் ஆய்வு செய்தார். நீண்ட நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரானது. பல இடங்களில் குடியிருப்புப் பகுதியில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான தொடர் மழை காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் வீட்டினுள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.