திருப்பூர்: சேலம் மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் திருப்பூரில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த நிகழச்சியில் பங்கேற்பதற்காக தனி வேன் ஒன்றில் குழந்தைகள் உட்பட 36 பேர் நேற்று காலை திருப்பூர் வந்தனர்.
திருப்பூர்: சேலம் மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் திருப்பூரில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த நிகழச்சியில் பங்கேற்பதற்காக தனி வேன் ஒன்றில் குழந்தைகள் உட்பட 36 பேர் நேற்று காலை திருப்பூர் வந்தனர்.
நிகழச்சியை முடித்துவிட்டு நேற்று மாலை 6 மணியளவில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது, திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் அந்த வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது, வேன் தாமரைக்கோவில் அருகே சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியது.
இதனால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், வேனில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்தனர்.
இதனைஅடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியோடு காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.
தகவலறிந்த ஊத்துகுளி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிகழச்சியை முடித்துவிட்டு நேற்று மாலை 6 மணியளவில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.
அப்போது, திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் அந்த வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது, வேன் தாமரைக்கோவில் அருகே சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியது.
இதனால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், வேனில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயமடைந்தனர்.
இதனைஅடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியோடு காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.
தகவலறிந்த ஊத்துகுளி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.