கோவை : மூன்று மாதங்களுக்கு முன் போடப்பட்ட புட்டுவிக்கி சாலை முழுவதுமாக பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
கோவை : மூன்று மாதங்களுக்கு முன் போடப்பட்ட புட்டுவிக்கி சாலை முழுவதுமாக பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரையிலான போக்குவரத்து நெரிசலை குறைக்க, மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேம்பால பணிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு, பாலக்காடு, மற்றும் குனியமுத்தூர் மார்க்கமாக வரும் பேருந்துகள் மற்றும் வாகனங்களை திருப்பி விட குனியமுத்தூர் அரசு பள்ளியிலிருந்து, புட்டுவிக்கி சாலை செல்ல ரூ. 11 கோடி மதிப்பீட்டில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையும், தடுப்பு சுவரும் அமைக்கப்பட்டது.

அவசர அவசரமாகப் போடப்பட்ட இந்த சாலை மூன்று மாதங்களே ஆனநிலையில், குண்டும்-குழியுமாக தற்போது காட்சியளிக்கின்றது.
இதனிடையே, தற்போது மழை பெய்து வருவதால், இந்த புதிய சாலை அனைத்தும் மோசமாகி, சகதியாக மாறிவிட்டது.
தார் சாலை போடப்பட்ட தடயமே இன்றி முழுவதுமாக மண் சாலையாக மாறியுள்ளது.

தற்போது மாற்றுப்பாதையாக உள்ள புட்டுவிக்கி சாலையில் அதிக அளவில் வாகனங்கள சென்று வருகின்றன. குண்டும் குழியுமான சாலையால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவ்வப்போது சிறு சிறு விபத்துகளில் சிக்குகின்றனர்.
அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டுகள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரையிலான போக்குவரத்து நெரிசலை குறைக்க, மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேம்பால பணிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு, பாலக்காடு, மற்றும் குனியமுத்தூர் மார்க்கமாக வரும் பேருந்துகள் மற்றும் வாகனங்களை திருப்பி விட குனியமுத்தூர் அரசு பள்ளியிலிருந்து, புட்டுவிக்கி சாலை செல்ல ரூ. 11 கோடி மதிப்பீட்டில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையும், தடுப்பு சுவரும் அமைக்கப்பட்டது.

அவசர அவசரமாகப் போடப்பட்ட இந்த சாலை மூன்று மாதங்களே ஆனநிலையில், குண்டும்-குழியுமாக தற்போது காட்சியளிக்கின்றது.
இதனிடையே, தற்போது மழை பெய்து வருவதால், இந்த புதிய சாலை அனைத்தும் மோசமாகி, சகதியாக மாறிவிட்டது.
தார் சாலை போடப்பட்ட தடயமே இன்றி முழுவதுமாக மண் சாலையாக மாறியுள்ளது.

தற்போது மாற்றுப்பாதையாக உள்ள புட்டுவிக்கி சாலையில் அதிக அளவில் வாகனங்கள சென்று வருகின்றன. குண்டும் குழியுமான சாலையால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவ்வப்போது சிறு சிறு விபத்துகளில் சிக்குகின்றனர்.
அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டுகள் வலியுறுத்தி வருகின்றனர்.