பிளீச்சிங் கழிவுகளால் நுரையுடன் பாயும் நொய்யல்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கோவை: நொய்யல் ஆற்றில் பிளீச்சிங் கழிவுகள் கலப்பதால் தற்போது ஆற்று நீர் நுரை பொங்க பாய்ந்து வருகிறது.


கோவை: நொய்யல் ஆற்றில் பிளீச்சிங் கழிவுகள் கலப்பதால் தற்போது ஆற்று நீர் நுரை பொங்க பாய்ந்து வருகிறது.

நீண்ட நாட்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த நொய்யல் ஆற்றில் தற்போது கலக்கப்படும் கழிகளினால் நுரை பொங்கிவருவது இயற்கை ஆர்வலர்களையும் விவசாயிகளையும் வேதனையடையச் செய்துள்ளது. 

இது குறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன் கூறுகையில், "புட்டுவிக்கி குளம் அருகே பிளீச்சிங் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் காரணமாகவே தற்போது நொய்யலில் நுரை பொங்கி வருகிறது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் இரண்டு முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. முன்பைவிட தற்போது அதிக அளவில் நுரை பொங்கி வருகிறது. இதனால் அதிகபட்ச அளவில் கழிவு நீர் கலந்திருப்பதாக சந்தேகம் எழுகிறது. உடனடியாக இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்." என்றார்.

மேலும், சொட்டையாண்டி குட்டை, கங்கநாராயண சமுத்திரம், பேரூர் பெரியகுளம் மற்றும் செங்குளம் ஆகிய குளங்களில் இருந்து வரும் நீர் குனியமுத்தூர் வாய்க்காலில் நுழையாமல் தடுக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தொடர்பு கொள்ள முயன்ற போது, அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...