கோவை: பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 15,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால், பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
கோவை: பில்லூர் அணையில் இருந்து விநாடிக்கு 15,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால், பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கான நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது, அணையின் நீர்வரத்து வினாடிக்கு 18,000 கனஅடியாக இருப்பதால், அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில், தற்போது 98 அடிக்கும் மேலாக உயர்ந்தது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி அதன் உபரிநீர் பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் 4 மதகுகளும் திறக்கப்பட்டு, அதன்மூலம் விநாடிக்கு 14,000 கனஅடி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றின் வேகம் அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பிற்பகல் முதலே பவானியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையில் இருந்து பவானியாற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர், சிறுமுகை பகுதி வழியே ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள பவானிசாகர் அணையைச் சென்றடைகிறது. இதனால், பவானிசாகர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்து, அதன் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதனால், பவானிசாகர் அணையின் நீர்தேக்கப் பகுதிகளாக உள்ள லிங்காபுரம், காந்தபள்ளம், புதுக்காடு, மொக்கைமேடு, அம்மன்புதூர், பெதிக்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் பயிரடபட்டிருந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்கள் அனைத்தும் நீருக்கடியில் மூழ்கியதால், மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட வாழை விவசாயிகள் பெரும் இழப்பில் சிக்கி தவிக்கின்றனர். அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளில் பொதுப்பணித் துறையினரின் அனுமதியோடு, வாழை சாகுபடி செய்துள்ள பல லட்சம் வரை கடன் பெற்று வாழை பயிரிட்ட நிலையில், இவையனைத்தும் ஒரே இரவில் நீருக்கு இறையாகியிருப்பது விவசாயிகளைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கான நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது, அணையின் நீர்வரத்து வினாடிக்கு 18,000 கனஅடியாக இருப்பதால், அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில், தற்போது 98 அடிக்கும் மேலாக உயர்ந்தது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி அதன் உபரிநீர் பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் 4 மதகுகளும் திறக்கப்பட்டு, அதன்மூலம் விநாடிக்கு 14,000 கனஅடி நீர் பவானியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றின் வேகம் அதிகரித்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பிற்பகல் முதலே பவானியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையில் இருந்து பவானியாற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர், சிறுமுகை பகுதி வழியே ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள பவானிசாகர் அணையைச் சென்றடைகிறது. இதனால், பவானிசாகர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்து, அதன் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதனால், பவானிசாகர் அணையின் நீர்தேக்கப் பகுதிகளாக உள்ள லிங்காபுரம், காந்தபள்ளம், புதுக்காடு, மொக்கைமேடு, அம்மன்புதூர், பெதிக்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் பயிரடபட்டிருந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

இன்னும் ஓரிரு வாரங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்கள் அனைத்தும் நீருக்கடியில் மூழ்கியதால், மேட்டுப்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட வாழை விவசாயிகள் பெரும் இழப்பில் சிக்கி தவிக்கின்றனர். அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளில் பொதுப்பணித் துறையினரின் அனுமதியோடு, வாழை சாகுபடி செய்துள்ள பல லட்சம் வரை கடன் பெற்று வாழை பயிரிட்ட நிலையில், இவையனைத்தும் ஒரே இரவில் நீருக்கு இறையாகியிருப்பது விவசாயிகளைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.