பழுதடைந்த குனியமுத்தூர் - புட்டுவிக்கி சாலையில் தி.மு.க.வினர் நாற்று நட்டு போராட்டம்

கோவை: குனியமுத்தூர் - புட்டுவிக்கி இடையிலான பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி தி.மு.க.,வினர் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: குனியமுத்தூர் - புட்டுவிக்கி இடையிலான பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி தி.மு.க.,வினர் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



ஆத்துப்பாலம் முதல் உக்கடம் வரையிலான போக்குவரத்து நெரிசலை குறைக்க, மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேம்பால பணிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு, பாலக்காடு, மற்றும் குனியமுத்தூர் மார்க்கமாக வரும் பேருந்துகள் மற்றும் வாகனங்களை திருப்பி விட குனியமுத்தூர் அரசு பள்ளியிலிருந்து, புட்டுவிக்கி சாலை செல்ல ரூ. 11 கோடி மதிப்பீட்டில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையும், தடுப்பு சுவரும் அமைக்கப்பட்டது.

அவசர அவசரமாகப் போடப்பட்ட இந்த சாலை 2 மாதங்களே ஆனநிலையில், குண்டும்-குழியுமாக தற்போது காட்சியளிக்கின்றது. இதனிடையே, தற்போது மழை பெய்து வருவதால், இந்த புதிய சாலை அனைத்தும் மோசமாகி, சகதியாக மாறிவிட்டது. இந்நிலையில், தரமற்ற சாலை அமைக்கப்பட்டதைக் கண்டித்து கோவை மாநகர் மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில் தி.மு.க.,வினர் நாற்றுநட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இது குறித்து தி.மு.க. வைச் சேர்ந்த முத்துசாமி கூறுகையில்;- இந்த புதிய சாலை 10 நாட்களுக்கு முன்புதான் திறந்து வைத்தனர். அதற்குள் மிக மோசமான அளவில் பழுதடைந்து விட்டது. இந்த சாலை அமைப்பதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும், மாநகராட்சி நிர்வாகவும் மோசடி செய்துள்ளனர். இந்த சாலையை ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியிலேயே செப்பனிட வேண்டும். இல்லையேல் தி.மு.க., செயல்தலைவர் அனுமதியோடு நீதிமன்றத்தை நாடுவோம், என்றார். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...