கோவை குடும்பநல செயலகம் சார்பில் மக்கள் தொகைப் பெருக்கம் குறித்த விழிப்புணர்வு பேரணி

கோவை: சர்வதேச மக்கள் தொகை தினத்தையொட்டி, கோவை மாவட்ட குடும்பநல செயலகம் சார்பில் மக்கள் தொகைப் பெருக்கம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோவை: சர்வதேச மக்கள் தொகை தினத்தையொட்டி, கோவை மாவட்ட குடும்பநல செயலகம் சார்பில் மக்கள் தொகைப் பெருக்கம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

மக்கள் தொகை பெருக்கத்தின் விளைவாக ஏற்படும் விளைவுகளைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஜூலை 11-ம் தேதி உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக "சிறு குடும்பமே ஓர் அர்த்தமுள்ள எதிர்கால ஆரம்பத்திற்கு உறுதுணை" என்பதை வலியுறுத்தி கோவை மாவட்ட குடும்பநல செயலகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



இப்பேரணியில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். காலை 10 மணிக்கு பேரணி தொடங்கும் என மாவட்ட குடும்பநல செயலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மாணவ, மாணவிகள் மழையையும் பொருட்படுத்தாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காத்திருந்தனர். ஆனால், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், சுமார் 10.30 மணியளவில் வந்து பேரணியை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி பந்தய சாலையில் உள்ள சுகாதார அலுவலகத்தில் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கமிஷனர் அலுவலகம் வரை சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே பேரணி முடிவுற்றது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...