மழை காரணமாக நீலகிரி - குண்டல்பேட் தேசிய நெடுஞ்சாலையில் டிரக் கவிழ்ந்து விபத்து

நீலகிரி: நீலகிரி - குண்டல்பேட் தேசிய நெடுஞ்சாலையின் மலைப் பகுதியில் மழையின் காரணமாக டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி: நீலகிரி - குண்டல்பேட் தேசிய நெடுஞ்சாலையின் மலைப் பகுதியில் மழையின் காரணமாக டிரக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

நீலகிரி மாவட்டத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நடுவட்டம். இந்த மலைப் பகுதியின் கொண்டை ஊசி வளைவில் திரும்பிய டிரக் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.



மழையின் காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. மேலும், அந்த வழியாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இந்த கொண்டை ஊசி வளைவில், மண் அதிகம் சூழ்ந்திருப்பதால் பெரும்பாலான விபத்துக்கள் இப்பகுதியில் ஏற்படுகின்றன. எனவே, காலநிலைக்கு ஏற்றவாறு, சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினர். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...