மேட்டுப்பாளையத்தில் 35 ஆண்டுகள் பழமையான அரச மரத்திற்கு மறுவாழ்வு!

மரம் வளர்ந்த இடத்தின் தாய் மண் மட்டும் அதன் வேருடன் ஒட்டி இருக்கும் வகையில் மெல்ல மெல்ல அகற்றப்பட்ட இம்மரம், பின்னர் கிரேன் மூலம் எடுத்து செல்லப்பட்டு, அதே கோவிலுக்கு அருகில் உள்ள நந்தவனம் என்னுமிடத்தில் மீண்டும் பக்குவமாய் மறு நடவு செய்யப்பட்டது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், வெட்டி அழிக்கப்படுவதை தடுக்கும் வகையில் 36 வயது அரச மரமொன்று பூமியில் இருந்து வேருடன் எடுக்கப்பட்டு மீண்டும் மறு இடத்தில் நடவு செய்யப்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானியாற்று கரையோர பகுதியான தேக்கம்பட்டி என்னும் அமைந்துள்ள அருள்மிகு வன பத்திரகாளியம்மன் கோவில் வளாகத்தில் பெரிய அரச மரமொன்று உள்ளது. தற்போது இக்கோவிலின் ராஜகோபுரம் அமைக்கும் திருப்பணி துவங்கியுள்ள நிலையில், இதற்காக இந்த அரச மரத்தை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.



மிகவும் செழிப்பாக காணப்படும் இம்மரம், இதுவரை கோவிலை தேடி வந்த பக்தர்களுக்கு நிழல் தந்து வந்த காரணத்தால் இதனை வெட்டி அழிக்க கோவில் நிர்வாகம் மிகவும் தயங்கியது. இதனை அறிந்த கோவையை சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பான ஓசை என்னும் தன்னார்வ அமைப்பு இம்மரத்தை காக்க முன்வந்தது.

அதன்படி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் அனுமதியுடன் இன்று மாலை கோவில் வளாகத்தின் முன் பகுதியில் இருந்த 36 வயதான இந்த பிரமாண்ட அரச மரம் நவீன தொழில் நுட்ப உதவியுடன் பூமியில் இருந்து அப்படியே வேருடன் மேல் நோக்கி எடுக்கப்பட்டது.



மரம் வளர்ந்த இடத்தின் தாய் மண் மட்டும் அதன் வேருடன் ஒட்டி இருக்கும் வகையில் மெல்ல மெல்ல அகற்றப்பட்ட இம்மரம், பின்னர் கிரேன் மூலம் எடுத்து செல்லப்பட்டு, அதே கோவிலுக்கு அருகில் உள்ள நந்தவனம் என்னுமிடத்தில் மீண்டும் பக்குவமாய் மறு நடவு செய்யப்பட்டது.

மிக மிக கவனத்துடன் மரத்தின் உயிர்த்தன்மை பாதிக்கப்படாமல் சுமார் நான்கு மணி நேரத்தில் இப்பணி நிறைவு பெற்றது. ஒரு அரச மரத்திற்கு இதன் மூலம் மறுவாழ்வு கிடைத்தது என்பதை விட, மரத்தை காக்க எடுக்கப்பட்ட இம்முயற்சி, மரங்களின் முக்கியத்துவத்தையும், அவற்றை காக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவே அமைந்தது எனலாம்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...