கோவை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை 13 மற்றும் 14-ம் தேதிகளில் ரத்து

கோவை: பொறியியல் பணிகள் காரணமாக வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் கோவை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



கோவை: பொறியியல் பணிகள் காரணமாக வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் கோவை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

கோவை - திருப்பூர் இடையிலான வஞ்சிபாளையம் ரயில்நிலையத்தில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சேலம் வழியாக இயங்கும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. மேலும், கோவை - சேலம் ரயில் வரும் 13 மற்றும் 14-ம் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. 

வரும் 14-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்: 

அலப்பி - டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ், கோவையில் சுமார் 60 நிமிடங்கள் நிறுத்தப்படும். அதாவது, நண்பகல் 12 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், மதியம் 1 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும்.

எர்ணாகுளம் - கே.ஆர்.எஸ்., பெங்களூரூ எக்ஸ்பிரஸ் ரயில், கோவையில் சுமார் 30 நிமிடங்கள் நிறுத்தப்படும். அதாவது, மதியம் 12.50 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், மதியம் 1.20 மணிக்கு புறப்படும். 

கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது, மதியம் 2.55 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில், 70 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்.

கோவை - சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 80 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. மதியம் 03.25 மணிக்கு கிளம்ப வேண்டிய ரயில், மாலை 04.45 மணிக்கு புறப்படுகிறது. 

கே.ஆர்.எஸ்., பெங்களூரூ - எர்ணாகுளம் ரயில் நிலையம் எக்ஸ்பிரஸ் ரயில் ஓமலூர் ரயில் நிறுத்தத்தில் 15 நிமிடங்களும், சேலத்தில் 30 நிமிடங்களும், சங்கரி துர்க்கில் 15 நிமிடங்களும், ஈரோடு ரயில் நிலையத்தில் 40 நிமிடங்கள் நிறுத்தப்படும். 

சென்னை சென்ட்ரல் கோயம்புத்தூர் கோவை எக்ஸ்பிரஸ் சுமார் 30 நிமிடங்கள் ஜோலார்பேட்டையிலும், 10 நிமிடங்கள் மொரப்பூரிலும், 30 நிமிடங்கள் சேலத்திலும், 20 நிமிடங்கள் ஈரோடு ரயில் நிலையத்திலும் நிறுத்தப்படும். 

சென்னை சென்ட்ரல் கோயம்புத்தூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 30 நிமிடங்கள் ஜோலார்பேட்டையிலும், 10 நிமிடங்கள் மொரப்பூரிலும், 20 நிமிடங்கள் சேலத்திலும், 20 நிமிடங்கள் ஈரோடு ரயில் நிலையத்திலும் நிறுத்தப்படும். 

இதேபோல, வரும் 13-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள் : 

கோவை - சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரயில், 1.40 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும். அதாவது, கோவையில் பிற்பகல் 02.55 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், மாலை 04.35 மணிக்கு இயக்கப்படுகிறது. 

கோவை - சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ், சுமார் 1.30 மணி நேரம் தாமதமாக கோவையில் இருந்து கிளம்புகிறது. மதியம் 03.33 மணிக்குப் புறப்பட வேண்டிய இந்த ரயில், மாலை 05.03 மணிக்கு புறப்படுகிறது. 

எர்ணாகுளம் ரயில்நிலையம்- பரௌனி ரயில்நிலையம் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில், 1.30 மணி நேரம் தாமதமாக புறப்படுகிறது. பிற்பகல் 03.33 மணிக்கு கிளம்ப வேண்டிய இந்த ரயில், மாலை 05.03 மணிக்கு இயக்கப்படுகிறது.

மங்களூரூ ரயில்நிலையம் - சென்னை எழும்பூர் ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதாவது, பிற்பகல் 03.40 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட வேண்டிய இந்த ரயில், 1.10 மணி நேரம் தாமதமாக, மாலை 04.50 மணிக்கு கிளம்புகிறது. 

திருவனந்தபுரம் - ஐதரபாத் சபரி எக்ஸ்பிரஸ் ரயில் கோவையில் இருந்து 35 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படுகிறது. மாலை 04.35 புறப்பட வேண்டிய இந்த ரயில், 05.10 மணிக்கு செல்கிறது. 

பாலக்காடு டவுன் - ஈரோடு பயணிகள் ரயில் வஞ்சிப்பாளையத்தில் 35 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு இயக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...