திருப்பூர்: திருப்பூரில் தொடங்கியுள்ள விஸ்கோஸ் செயற்கை நூல் மற்றும் துணிக்கான நிரந்தரக் கண்காட்சியை ஏராளமான ஏற்றுமதியாளர்கள் பார்வையிட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் தொடங்கியுள்ள விஸ்கோஸ் செயற்கை நூல் மற்றும் துணிக்கான நிரந்தரக் கண்காட்சியை ஏராளமான ஏற்றுமதியாளர்கள் பார்வையிட்டனர்.
ஆடை உற்பத்தியின் பல்வேறு பிரிவினருக்கு உதவும் வகையில், தமிழகத்தில் முதன்முறையாக நிரந்தர கண்காட்சி திருப்பூரில் தொடங்கப்பட்டது. பருத்திக்கு மாற்றாக விஸ்கோஸ் ஆடைகளுக்கு வெளிநாட்டு முகவர்கள் அதிகளவில் விரும்புவதால், இனி இந்த டிசைன் ஸ்டுடியோ மூலம் பின்னலாடை ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் சார்பில் நியூயார்க் மற்றும் உத்தரபிரதேசத்தின் நொய்டா ஆகிய நகரங்களையடுத்து, பின்னலாடை தொழில் நகரான திருப்பூரில், இந்த செயற்கை நூல் மற்றும் துணிக்கான நிரந்தர கண்காட்சி திறக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய பகுதியான நேரு வீதியின் அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் திறந்து வைத்தார். இதில், ஏராளமான ஏற்றுமதியாளர் கலந்து கொண்டு கண்காட்சியைப் பார்வையிட்டு வருகின்றனர்.

ஆடை உற்பத்தியின் பல்வேறு பிரிவினருக்கு உதவும் வகையில், தமிழகத்தில் முதன்முறையாக நிரந்தர கண்காட்சி திருப்பூரில் தொடங்கப்பட்டது. பருத்திக்கு மாற்றாக விஸ்கோஸ் ஆடைகளுக்கு வெளிநாட்டு முகவர்கள் அதிகளவில் விரும்புவதால், இனி இந்த டிசைன் ஸ்டுடியோ மூலம் பின்னலாடை ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் சார்பில் நியூயார்க் மற்றும் உத்தரபிரதேசத்தின் நொய்டா ஆகிய நகரங்களையடுத்து, பின்னலாடை தொழில் நகரான திருப்பூரில், இந்த செயற்கை நூல் மற்றும் துணிக்கான நிரந்தர கண்காட்சி திறக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய பகுதியான நேரு வீதியின் அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் திறந்து வைத்தார். இதில், ஏராளமான ஏற்றுமதியாளர் கலந்து கொண்டு கண்காட்சியைப் பார்வையிட்டு வருகின்றனர்.
