பல்லடம் அருகே காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகைப் போராட்டம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சீரான குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து ஊராட்சிமன்ற அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சீரான குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து ஊராட்சிமன்ற அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

பல்லடத்தை அடுத்த சித்தம்பலம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த கிராமத்திற்கு கடந்த 3 மாதங்களாக சீரான குடிநீர் வழங்கவில்லை எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் பல முறை அரசு அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். தங்களது தேவைக்கு தண்ணீரை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தி வந்துள்ளனர். பலமுறை மனு அளித்தும் அரசு அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

இந்த நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் பல்லடம் ஊராட்சிமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய வட்டார வளர்ச்சி அலுவலர், கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...