கோவை: கோவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு தூரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
கோவை: கோவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு தூரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "கோவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். தூரல் மழைக்கு வாய்ப்புள்ளது. தொண்டாமுத்தூர், வால்பாறை போன்ற பகுதிகளுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனிடையே, பகல் நேர வெப்ப நிலையானது 29 முதல் 31 டிகிரி செல்சியசாகவும், இரவு நேர வெப்ப நிலை 22 முதல் 24 டிகிரி செல்சியாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கனமழைக்கு வாய்ப்பு அதிகம். ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் குறைந்த அளவே மழை பெய்யும். கோவையில் காற்றின் வேகம் 10 முதல் 12 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது." என்றார்.