அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி செய்து கொடுத்த ஆசிரியர்கள்: திருப்பூரில் ருசிகரம்

திருப்பூர்: திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இலவச பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இலவச பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

ஊத்துக்குளி ரோடு, பாரப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில், 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 

கிராமப்புறத்தில் உள்ள இப்பள்ளிக்கு சுற்றுவட்டாரத்தில் இருந்து, நூற்றுக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்.

குளத்துப்பாளையத்தில் இருந்து பாரப்பாளையம் பள்ளிக்கு 2.5 கி.மீ. தொலைவு செல்ல வேண்டும். இதனால், இப்பள்ளிக்கு வரும் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

பெற்றோரிடம் நிலையை எடுத்துக்கூறி ஆசிரியர்கள் மாணவர்களை பள்ளிக்கு வர வைத்தனர். இந்த சூழலில், குளத்துப்பாளையத்தில் இருந்து நடந்தும், சைக்கிள் மூலமாகவும் பள்ளிக்கு வரும், 50 மாணவர்களின் வசதிக்காக வாடகை பேருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



பள்ளி மேலாண்மை குழு, தன்னார்வலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், அன்னையர் குழு, தலைமை ஆசிரியர், கல்வியாளர், பேஸ்புக் நண்பர்கள் இணைந்து ஒரு பேருந்தை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

இந்த பேருந்து தினமும் குளத்துப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு வீடு, வீடாகச் சென்று ஒன்று முதல் ஐந்தாவது வரை படிக்கும் பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்று பள்ளியில் விடும். அதே போல், மாலையில் வீட்டுக்கு சென்று அவர்களை வீட்டில் இறக்கி விடுவர்.



இந்த பேருந்துக்கான வாடகை மற்றும் எரிபொருள் செலவு என மாதம் ரூ.14 ஆயிரத்தை அனைவரும் பகிர்ந்து கொடுக்கின்றனர். ஏழை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இலவச பேருந்து வசதியை செய்து கொடுத்த நிகழ்வு மாணவர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. 

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...