மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா தொடக்கம்: தயார் நிலையில் அடிப்படை வசதிகள்

கோவை: மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவிலில் குண்டம் கண் திறப்பு நிகழ்ச்சியுடன் ஆடி குண்டம் திருவிழா இன்று தொடங்கியது.

கோவை: மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவிலில் குண்டம் கண் திறப்பு நிகழ்ச்சியுடன் ஆடி குண்டம் திருவிழா இன்று தொடங்கியது.

கோவை மாவட்டத்தின் பிரசித்திபெற்ற அம்மன் திருத்தலமான மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி அருள்மிகு வன பத்திரகாளியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி குண்டம் விழா நடைபெறுவது வழக்கம்.

இக்கோவிலின் 27-ம் ஆண்டு ஆடி குண்டம் திருவிழாவிற்கான குண்டம் கண் திறப்பு நிகழ்ச்சி இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே பவானி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. அப்போது, அம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

குண்டம்

கோவில் முன்பு சுமார் 36 அடி நீளத்தில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் குண்டம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குண்டத்தினை பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தலைமை பூசாரி பரமேஸ்வரன் குண்டத்தினை சுற்றி வலம் வந்து சிறப்பு பூஜைகள் செய்து மேள தாளம் முழங்க குண்டத்தினை கண் திறந்து, ஆடி குண்ட திருவிழா நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.



இதனையடுத்து, 15 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் இருந்து சுமார் ஜம்பதாரயித்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் சிறப்பு பேருந்து வசதிகள், குடிநீர், சுகாதார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என அனைத்தும் செய்யப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...