அடுத்த அறிவிப்பு வரும் வரை கோவை குற்றாலம் மூடப்பட்டிருக்கும் - வனத்துறை

கோவை: மழை மற்றும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருக்கும் கோவை குற்றாலம் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடியே இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை: மழை மற்றும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருக்கும் கோவை குற்றாலம் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடியே இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக மழை பெய்து வருவதால் கோவை குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த மாதம் 9-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை கோவை குற்றாலம் மூடப்பட்டது. 

மழை ஓய்ந்ததன் காரணமாக, கடந்த மாதம் 25-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்ட குற்றாலம் நான்கு நாட்கள் செயல்பட்டது. ஆனால், மீண்டும் மழை தொடரவே மீண்டும் மூடப்பட்டது. கடந்த புதன்கிழமை வரை மொத்தமாக 17 நாட்கள் விடுமுறையில் இருந்த குற்றாலம் திறக்கப்பட்டது.

வியாழனன்று திறக்கப்பட்ட குற்றாலம், இரண்டே நாட்கள் செயல்பட்டு மீண்டும் சனிக்கிழமை மூடப்பட்டது. இப்படியான விடுமுறை காரணமாக அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் குழப்பமடைந்தனர். அங்கு சென்ற சிலர் ஏமாற்றங்களுடன் வீடு திரும்பினர். 

இந்த சூழலில் கோவை வனக்கோட்டத்தின் அறிவிப்பு வெளியாகும் வரையில் கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதியில்லை என்று வனத்துறை அறிவித்துள்ளது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...