கோவை: மழை மற்றும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருக்கும் கோவை குற்றாலம் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடியே இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை: மழை மற்றும் அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருக்கும் கோவை குற்றாலம் அடுத்த அறிவிப்பு வரும் வரை மூடியே இருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக மழை பெய்து வருவதால் கோவை குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த மாதம் 9-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை கோவை குற்றாலம் மூடப்பட்டது.
மழை ஓய்ந்ததன் காரணமாக, கடந்த மாதம் 25-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்ட குற்றாலம் நான்கு நாட்கள் செயல்பட்டது. ஆனால், மீண்டும் மழை தொடரவே மீண்டும் மூடப்பட்டது. கடந்த புதன்கிழமை வரை மொத்தமாக 17 நாட்கள் விடுமுறையில் இருந்த குற்றாலம் திறக்கப்பட்டது.
வியாழனன்று திறக்கப்பட்ட குற்றாலம், இரண்டே நாட்கள் செயல்பட்டு மீண்டும் சனிக்கிழமை மூடப்பட்டது. இப்படியான விடுமுறை காரணமாக அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் குழப்பமடைந்தனர். அங்கு சென்ற சிலர் ஏமாற்றங்களுடன் வீடு திரும்பினர்.
இந்த சூழலில் கோவை வனக்கோட்டத்தின் அறிவிப்பு வெளியாகும் வரையில் கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதியில்லை என்று வனத்துறை அறிவித்துள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக மழை பெய்து வருவதால் கோவை குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த மாதம் 9-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை கோவை குற்றாலம் மூடப்பட்டது.
மழை ஓய்ந்ததன் காரணமாக, கடந்த மாதம் 25-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்ட குற்றாலம் நான்கு நாட்கள் செயல்பட்டது. ஆனால், மீண்டும் மழை தொடரவே மீண்டும் மூடப்பட்டது. கடந்த புதன்கிழமை வரை மொத்தமாக 17 நாட்கள் விடுமுறையில் இருந்த குற்றாலம் திறக்கப்பட்டது.
வியாழனன்று திறக்கப்பட்ட குற்றாலம், இரண்டே நாட்கள் செயல்பட்டு மீண்டும் சனிக்கிழமை மூடப்பட்டது. இப்படியான விடுமுறை காரணமாக அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் குழப்பமடைந்தனர். அங்கு சென்ற சிலர் ஏமாற்றங்களுடன் வீடு திரும்பினர்.
இந்த சூழலில் கோவை வனக்கோட்டத்தின் அறிவிப்பு வெளியாகும் வரையில் கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதியில்லை என்று வனத்துறை அறிவித்துள்ளது.