கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் பருவ மழைக் காரணமாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கால், பில்லூர் அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்ந்துள்ளது.
கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் பருவ மழைக் காரணமாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கால், பில்லூர் அணையின் நீர்மட்டம் 92 அடியாக உயர்ந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைக்காட்டின் நடுவே கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ளது பில்லூர் அணை. இவ்வணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தின் அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா மற்றும் கேரள வனப்பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. இதனால், பில்லூர் அணைக்கான நீர்வரத்து 800 கனஅடியில் இருந்து 3,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 85 அடியில் இருந்து 92 அடியாக உயர்ந்தது.
இதனையடுத்து, அணையில் இருந்து மின்சாரம் எடுப்பதற்காக பவானி ஆற்றில் இருந்து 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, மழை பெய்து வருவதால் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைக்காட்டின் நடுவே கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அமைந்துள்ளது பில்லூர் அணை. இவ்வணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தின் அப்பர் பவானி, அவலாஞ்சி, குந்தா மற்றும் கேரள வனப்பகுதிகளில் பருவமழை பெய்து வருகிறது. இதனால், பில்லூர் அணைக்கான நீர்வரத்து 800 கனஅடியில் இருந்து 3,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையின் நீர்மட்டம் 85 அடியில் இருந்து 92 அடியாக உயர்ந்தது.
இதனையடுத்து, அணையில் இருந்து மின்சாரம் எடுப்பதற்காக பவானி ஆற்றில் இருந்து 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, மழை பெய்து வருவதால் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.