கோவை: கோவையில் டவுன்ஹால், தாமஸ் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 750 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை: கோவையில் டவுன்ஹால், தாமஸ் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 750 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில், தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றதா..? என கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைகளில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட பான் மசாலா குட்கா பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது
இந்த நிலையில், இன்று தாமஸ் வீதியில் உள்ள மங்கள்சிங் என்பவருக்குச் சொந்தமான மீனாட்சி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, 750 கிலோ எடையுள்ள சுமார் ரூ. 7 லட்சம் மதிப்பிலான பான்மசாலா, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில், தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றதா..? என கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைகளில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட பான் மசாலா குட்கா பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது
இந்த நிலையில், இன்று தாமஸ் வீதியில் உள்ள மங்கள்சிங் என்பவருக்குச் சொந்தமான மீனாட்சி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, 750 கிலோ எடையுள்ள சுமார் ரூ. 7 லட்சம் மதிப்பிலான பான்மசாலா, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.