திருப்பூர்: காங்கயம் அருகே மடிக்கணினி வாங்குவதற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தில், மாடு வளர்க்க ஆசைப்பட்டு பள்ளி மாணவன் ஒருவர் மாட்டுச் சந்தையில் கன்றுக்குட்டி வாங்கிச் சென்ற சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பூர்: காங்கயம் அருகே மடிக்கணினி வாங்குவதற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தில், மாடு வளர்க்க ஆசைப்பட்டு பள்ளி மாணவன் ஒருவர் மாட்டுச் சந்தையில் கன்றுக்குட்டி வாங்கிச் சென்ற சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சிவகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பொன்.சிவவேல். இந்த மாணவருக்கு மடிக்கணினி வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் அதிகம். இதனால், மடிக்கணினி வாங்குவதற்காக பெற்றோர் செலவுக்கு கொடுத்த பணத்தை சேர்த்து வைத்துள்ளார். இவ்வாறாக, ரூ.19 ஆயிரம் சேமித்து வைத்திருந்தார்.
இந்த நிலையில், அவருக்கு காங்கயம் இன மாடு வளர்க்க ஆசை வந்தது. ஒரு கன்றுக்குட்டியை வாங்கி வளர்க்க வேண்டும் என முடிவு செய்து, அவரின் பெற்றோரை அழைத்துக் கொண்டு கடந்த 1-ஆம் தேதி காங்கயம் அருகே நத்தக்காடையூரில் கூடும் காங்கயம் இன மாடுகள் சந்தைக்கு கன்றுக்குட்டி வாங்க வந்தார். காங்கயம் இன மாடுகளை மட்டுமே விற்க-வாங்க ஞாயிற்றுக் கிழமைதோறும் நடைபெறும் இந்த சந்தையில், காங்கயம் இன கன்றுக்குட்டிகளின் ஆரம்ப விலையே ரூ.30 ஆயிரத்தைத் தாண்டும்.
இந்நிலையில், பொன்.சிவவேல் சந்தைக்கு வந்து கன்றுக்குட்டி வாங்குவதற்கு விலையை விசாரித்து விட்டு, தன் கையில் இருந்த பணம் ரூ.19 ஆயிரத்திற்கு மாடு வாங்க முடியாமல், ஏமாற்றத்துடன் பெற்றோருடன் திரும்பிச் சென்றார். காங்கயம் இன மாடு வளர்க்கும் அந்த மாணவனின் ஆர்வத்தைத் தெரிந்து கொண்ட மாட்டுச் சந்தை ஏற்பாட்டாளர்கள், ஜூலை 8-ஆம் தேதி நடைபெற்ற அந்த சந்தைக்கு மாணவன் பொன்.சிவவேலை அழைத்துள்ளனர்.
மாட்டுச் சந்தை ஏற்பாட்டாளர்கள் ஆளுக்கு கொஞ்சம் பணம் அளித்து ரூ.13 ஆயிரத்தை அந்த சிறுவனிடம் கொடுத்தனர். இதில் உற்சாகமான பொன்.சிவவேல், சந்தை ஏற்பாட்டாளர்கள் கொடுத்த ரூ.13 ஆயிரம், தன் கையில் வைத்திருந்த ரூ.19 ஆயிரத்தை சேர்த்து ரூ.32 ஆயிரத்துக்கு காங்கயம் இன கிடாரிக் கன்று ஒன்றை வாங்கிச் சென்றார்.
பள்ளிச் சிறுவனின் மாடு வளர்க்கும் இந்த ஆர்வம் அப்பகுதி பொதுமக்களையும், விவசாயிகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், சிவகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பொன்.சிவவேல். இந்த மாணவருக்கு மடிக்கணினி வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் அதிகம். இதனால், மடிக்கணினி வாங்குவதற்காக பெற்றோர் செலவுக்கு கொடுத்த பணத்தை சேர்த்து வைத்துள்ளார். இவ்வாறாக, ரூ.19 ஆயிரம் சேமித்து வைத்திருந்தார்.
இந்த நிலையில், அவருக்கு காங்கயம் இன மாடு வளர்க்க ஆசை வந்தது. ஒரு கன்றுக்குட்டியை வாங்கி வளர்க்க வேண்டும் என முடிவு செய்து, அவரின் பெற்றோரை அழைத்துக் கொண்டு கடந்த 1-ஆம் தேதி காங்கயம் அருகே நத்தக்காடையூரில் கூடும் காங்கயம் இன மாடுகள் சந்தைக்கு கன்றுக்குட்டி வாங்க வந்தார். காங்கயம் இன மாடுகளை மட்டுமே விற்க-வாங்க ஞாயிற்றுக் கிழமைதோறும் நடைபெறும் இந்த சந்தையில், காங்கயம் இன கன்றுக்குட்டிகளின் ஆரம்ப விலையே ரூ.30 ஆயிரத்தைத் தாண்டும்.
இந்நிலையில், பொன்.சிவவேல் சந்தைக்கு வந்து கன்றுக்குட்டி வாங்குவதற்கு விலையை விசாரித்து விட்டு, தன் கையில் இருந்த பணம் ரூ.19 ஆயிரத்திற்கு மாடு வாங்க முடியாமல், ஏமாற்றத்துடன் பெற்றோருடன் திரும்பிச் சென்றார். காங்கயம் இன மாடு வளர்க்கும் அந்த மாணவனின் ஆர்வத்தைத் தெரிந்து கொண்ட மாட்டுச் சந்தை ஏற்பாட்டாளர்கள், ஜூலை 8-ஆம் தேதி நடைபெற்ற அந்த சந்தைக்கு மாணவன் பொன்.சிவவேலை அழைத்துள்ளனர்.
மாட்டுச் சந்தை ஏற்பாட்டாளர்கள் ஆளுக்கு கொஞ்சம் பணம் அளித்து ரூ.13 ஆயிரத்தை அந்த சிறுவனிடம் கொடுத்தனர். இதில் உற்சாகமான பொன்.சிவவேல், சந்தை ஏற்பாட்டாளர்கள் கொடுத்த ரூ.13 ஆயிரம், தன் கையில் வைத்திருந்த ரூ.19 ஆயிரத்தை சேர்த்து ரூ.32 ஆயிரத்துக்கு காங்கயம் இன கிடாரிக் கன்று ஒன்றை வாங்கிச் சென்றார்.
பள்ளிச் சிறுவனின் மாடு வளர்க்கும் இந்த ஆர்வம் அப்பகுதி பொதுமக்களையும், விவசாயிகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.