பாரம்பரிய விளையாட்டுக்களை மீட்க மேட்டுப்பாளையத்தில் புதிய முயற்சி

மேட்டுப்பாளையம்: இன்றைய நவீன மாற்றங்களால் நமது வாழ்வியல், கலாச்சாரம், உணவு உள்ளிட்ட பல்வேறு பாரம்பரியங்களை புறந்தள்ளி வருகிறோம்.


மேட்டுப்பாளையம்: இன்றைய நவீன மாற்றங்களால் நமது வாழ்வியல், கலாச்சாரம், உணவு உள்ளிட்ட பல்வேறு பாரம்பரியங்களை புறந்தள்ளி வருகிறோம். 

இதில் குறிப்பிடத்தக்கது நம் உடல் மற்றும் அறிவுத்திறனை ஒரு சேர செழுமைப்படுத்தும் நமது பாரம்பரிய விளையாட்டுக்கள். காலப்போக்கில் விளையாடாமல் விட்ட அந்த விளையாட்டுக்கள் மெல்ல மெல்ல மறக்கடிக்கப்பட்டு வருகின்றன.

கில்லிதாண்டு, பரமபதம், பல்லாங்குழி, ஆடு-புலி ஆட்டம், சொட்டாங்கல், நொண்டியாட்டம், சிலம்பாட்டம், உண்டிவில், பம்பரம், பட்டம் விடுதல் உள்ளிட்ட தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுக்கள் இன்றைய இளையதலைமுறை குழந்தைகளின் கவனத்திற்கே கொண்டு செல்லப்படுவதில்லை.



நினைவாற்றலை அதிகரித்து கொடுத்து வாங்கும் பண்பை வலியுறுத்தும் பல்லாங் குழியாட்டம், எத்தனை முறை தோல்வியடைந்தாலும் மீண்டும் முயற்சித்து வெற்றி பெற ஊக்குவிக்கும் பரமபத விளையாட்டு, கவன சிதறலை நேர்படுத்தும் சொட்டாங்கல், மனம் மற்றும் உடல் வலிமைக்கான சிலம்பாட்டம் என அனைத்து விளையாட்டுக்களும் மறைந்து போய், இன்றைய குழந்தைகள் செல்போனுக்குள் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



செல்போன் விளையாட்டு, கம்யூட்டர் கேம்ஸ், கார்டூன் வீடியோஸ் என வீட்டினுள் ஒரே இடத்தில் முடங்கிக் கிடப்பதால் குழந்தைகளின் உடல் நலம் மட்டுமின்றி, மன நலமும் பாதிக்கப்படுவதாக மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு இன்றைய பள்ளி பருவ மாணவ மாணவிகளிடம் மறைந்து வரும் நமது பாரம்பரிய விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தி, அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான நிகழ்ச்சி மேட்டுப்பாளையத்தில் இன்று நடத்தப்பட்டது. 

'லாலிபாப் மழலையர் பள்ளி' (lollypop kids school) சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர். இந்த விளையாட்டுக்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் இருந்த சிறுவர்-சிறுமியர்களுக்கு, விளையாட்டுக்களை விளையாடும் விதங்கள் குறித்தும் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...