கோவை குற்றாலத்தில் பழங்குடியினருக்கான பணியிடங்களைப் பறிக்கும் அதிகாரிகள்..?

கோவை: கோவை குற்றாலத்தில் பழங்குடியினருக்கென ஒதுக்கப்பட்ட பணியிடங்களில், பிற சமூகத்தினரை சட்டவிரோதமாக பணியமர்த்தியுள்ளதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

கோவை: கோவை குற்றாலத்தில் பழங்குடியினருக்கென ஒதுக்கப்பட்ட பணியிடங்களில், பிற சமூகத்தினரை சட்டவிரோதமாக பணியமர்த்தியுள்ளதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரம் அருகே சிறுவாணி பகுதியில் கோவை குற்றாலம் அமைந்துள்ளது. இங்கு, கடந்த 2009-ம் ஆண்டு முதல் வனத்துறையின் சார்பில் இயற்கை சுற்றுலாவிற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது. இங்கு, பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு மட்டுமே பணிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, பழங்குடியினர் உள்பட சீங்கபதி, சாடிவயல் மற்றும் வெள்ளப்பதி உள்ளிட்ட குக்கிராமங்களைச் சேர்ந்தவர்களை வைத்து இயற்கைச் சுற்றுலாக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. 



இந்தக் குழுவே, கோவை குற்றாலத்தில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பழங்குடியின மக்கள் அல்லாது வெளியில் இருப்பவர்கள் 22 பேர் சட்டவிரோதமாக பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாது, பழங்குடியின மக்களுக்கு ஒருநாளைக்கு ரூ. 275 முதல் ரூ. 285 வழங்கப்பட்டு வரும் நிலையில், வெளியாட்களுக்கு ரூ. 8,000 முதல் ரூ. 13,000 வரை வழங்குப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 



இந்த சூழலில், கோவை வனச்சரகத்திற்குட்பட்ட பரலிக்காடு பகுதியில் அமைந்துள்ள மற்றொரு இயற்கை சுற்றுலாப் பகுதியில் 60 பணியிடங்களில் பழங்குடியின மக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 

இதேபோல, இயற்கைச் சுற்றுலாக் குழுவின் தலைவரை தேர்வு செய்வதிலும் விதிமுறை மீறல்கள் நடைபெற்று வருவதாகப் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதாவது, குழுத் தலைவர் பதவிக்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித தேர்தலும் நடைபெறவில்லை. எனவே, ஒரே நபர் 10 ஆண்டுகளாக அந்தப் பதவியை வகித்து வருகிறார்.

 

மேலும், பழங்குடியினத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்களுக்கு அலுவலகத்தில் பணி வழங்க வேண்டும் என அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், தகுதியுடைய இளைஞர்களுக்கும் வாகன ஓட்டுநர் உள்ளிட்ட பணிகளையே வழங்குவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதோடு, பழங்குடியின சமுதாயத்தினரை முன்னேற்றும் வகையில், இயற்கை சுற்றுலாவிற்கென ஒதுக்கப்பட்ட ரூ. 77.70 லட்சத்தை உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 



இதனிடையே, சட்டவிரோத நியமனங்கள் குறித்து உரிய விசாரணை நடத்த உள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...