ஊதியம் வழங்காமல் ஏமாற்றிவிட்டதாக வடமாநில தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

கோவை: கோவை மாவட்டம் அன்னூரில் பணிபுரிந்ததற்கான ஊதியத்தை வழங்காமல் ஏமாற்றியதாக தனியார் நிறுவனத்தின் மீது வடமாநில இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: கோவை மாவட்டம் அன்னூரில் பணிபுரிந்ததற்கான ஊதியத்தை வழங்காமல் ஏமாற்றியதாக தனியார் நிறுவனத்தின் மீது வடமாநில இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

அன்னூர் கணேசபுரத்தில் ஸ்ரீவாராகி அம்மன் ஸ்டீல் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த 43 தொழிலாளிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் ஒப்பந்ததாரர் மூலம் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு ஒப்பந்ததாரர் அவெஹய் ரயுத்ராய் நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்று சம்பளம் வழங்கி வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த மே மாதம் 15 நாள் சம்பளமும், ஜீன் மாதம் முழுச் சம்பளமும் வழங்காமல் ஒப்பந்ததாரர் இழுத்தடித்து வந்துள்ளார். தொழிலாளர்கள் சம்பளத்தை நிர்வாகத்திடம் கேட்டால் ஒப்பந்ததாரரிடம் கொடுத்து விட்டதாக தெரிவிப்பதாகவும், ஒப்பந்ததாரர் நிர்வாகம் பணம் கொடுக்கவில்லை என சொல்லி அலைக்கழிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். மேலும், ஊதியம் கிடைக்காததால் வடமாநில தொழிலாளர்கள் சாப்பிடக் கூட வழியின்றி இருந்து வருவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.



இதனையடுத்து, உழைப்போர் உரிமை இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வடமாநில தொழிலாளர்கள் மனு அளித்தனர். வடமாநில தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்துள்ளதாகவும், நடவடிக்கை எடுக்க வில்லை எனில் அடுத்த கட்டமாக போராட்டம் நடத்துவது குறித்து இன்று மாலை முடிவு செய்ய இருப்பதாவும் உழைப்போர் உரிமை இயக்கத்தினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...