கோவை: கோவை மாவட்டம் அன்னூரில் பணிபுரிந்ததற்கான ஊதியத்தை வழங்காமல் ஏமாற்றியதாக தனியார் நிறுவனத்தின் மீது வடமாநில இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை: கோவை மாவட்டம் அன்னூரில் பணிபுரிந்ததற்கான ஊதியத்தை வழங்காமல் ஏமாற்றியதாக தனியார் நிறுவனத்தின் மீது வடமாநில இளைஞர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அன்னூர் கணேசபுரத்தில் ஸ்ரீவாராகி அம்மன் ஸ்டீல் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த 43 தொழிலாளிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் ஒப்பந்ததாரர் மூலம் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு ஒப்பந்ததாரர் அவெஹய் ரயுத்ராய் நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்று சம்பளம் வழங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மே மாதம் 15 நாள் சம்பளமும், ஜீன் மாதம் முழுச் சம்பளமும் வழங்காமல் ஒப்பந்ததாரர் இழுத்தடித்து வந்துள்ளார். தொழிலாளர்கள் சம்பளத்தை நிர்வாகத்திடம் கேட்டால் ஒப்பந்ததாரரிடம் கொடுத்து விட்டதாக தெரிவிப்பதாகவும், ஒப்பந்ததாரர் நிர்வாகம் பணம் கொடுக்கவில்லை என சொல்லி அலைக்கழிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். மேலும், ஊதியம் கிடைக்காததால் வடமாநில தொழிலாளர்கள் சாப்பிடக் கூட வழியின்றி இருந்து வருவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, உழைப்போர் உரிமை இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வடமாநில தொழிலாளர்கள் மனு அளித்தனர். வடமாநில தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்துள்ளதாகவும், நடவடிக்கை எடுக்க வில்லை எனில் அடுத்த கட்டமாக போராட்டம் நடத்துவது குறித்து இன்று மாலை முடிவு செய்ய இருப்பதாவும் உழைப்போர் உரிமை இயக்கத்தினர் தெரிவித்தனர்.
அன்னூர் கணேசபுரத்தில் ஸ்ரீவாராகி அம்மன் ஸ்டீல் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த 43 தொழிலாளிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் ஒப்பந்ததாரர் மூலம் வேலைக்கு சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு ஒப்பந்ததாரர் அவெஹய் ரயுத்ராய் நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்று சம்பளம் வழங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மே மாதம் 15 நாள் சம்பளமும், ஜீன் மாதம் முழுச் சம்பளமும் வழங்காமல் ஒப்பந்ததாரர் இழுத்தடித்து வந்துள்ளார். தொழிலாளர்கள் சம்பளத்தை நிர்வாகத்திடம் கேட்டால் ஒப்பந்ததாரரிடம் கொடுத்து விட்டதாக தெரிவிப்பதாகவும், ஒப்பந்ததாரர் நிர்வாகம் பணம் கொடுக்கவில்லை என சொல்லி அலைக்கழிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். மேலும், ஊதியம் கிடைக்காததால் வடமாநில தொழிலாளர்கள் சாப்பிடக் கூட வழியின்றி இருந்து வருவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, உழைப்போர் உரிமை இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வடமாநில தொழிலாளர்கள் மனு அளித்தனர். வடமாநில தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்துள்ளதாகவும், நடவடிக்கை எடுக்க வில்லை எனில் அடுத்த கட்டமாக போராட்டம் நடத்துவது குறித்து இன்று மாலை முடிவு செய்ய இருப்பதாவும் உழைப்போர் உரிமை இயக்கத்தினர் தெரிவித்தனர்.