அமித்ஷா சென்னை வருகைக்கு எதிர்ப்பு: டுவிட்டரில் டிரென்டான #goback அமித்ஷா

சென்னை: பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா சென்னையில் இன்று சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், #goback அமித்ஷா என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரென்டாகியுள்ளது.

சென்னை: பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா சென்னையில் இன்று சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில், #goback அமித்ஷா என்ற ஹேஸ்டேக் டுவிட்டரில் டிரென்டாகியுள்ளது. 

மக்களவைத் தேர்தலுக்கு வியூகம் வகுப்பதற்காக பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வந்துள்ளார். அவரை தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். சென்னை ஈச்சம்பாக்கத்தில் அமித்ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, மாலை 4 மணி வரை பா.ஜ., நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கிறார்.

மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை சகோதர இயக்கங்களுடன் கலந்துரையாடுகிறார். மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி சக்தி மற்றும் மகா சக்தி கேந்திரா அமைப்பின் பொறுப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

இந்த நிலையில், அமித்ஷாவின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டுவிட்டரில் #goback அமித்ஷா (#goback Amith shah) என்ற ஹேஸ்டேக் டிரென்டாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்த போது, #goback மோடி என்ற ஹேஸ்டேக் தேசிய அளவில் டிரென்டாகியது. பிரதமர் மோடியை தொடர்ந்து, தற்போது அமித்ஷாவிற்கு டுவிட்டர் மூலமாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழகத்தில் கால்பதிக்க வேண்டும் என பா.ஜ.க.,வினர் முழு முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், அடுத்தடுத்த பா.ஜ.க., தலைவர்களுக்கான இது மாதிரியான ஹேஸ்டேக்குகள் அக்கட்சியினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...