27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய 200-க்கும் மேற்பட்டோர் கைது

கோவை: உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை: உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஊராட்சி செயலாளர்களுக்கு பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும், உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3-ம் தேதி முதல் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டமானது நடைபெற்று வருகின்றது. 



இந்த நிலையில், கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது சங்க நிர்வாகிகள் பேசுகையில், "தங்களது கோரிக்கைகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வரும் 12-ம் தேதி தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து முறையிடுவோம்," என அவர்கள் தெரிவித்தனர். 



இதனையடுத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். மறியல் போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.



Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...