தானிய வகைகளை அரசே கொள்முதல் செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

கோவை: சிறுதானியம் உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க தானிய வகைகளை அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கோவை: சிறுதானியம் உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க தானிய வகைகளை அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கோவை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சிறு தானிய உற்பத்தி என்பது குறைந்துள்ளது. மேலும், மானாவாரி பயிராகவும், ஊடு பயிராகவும் விவசாயிகள் தானிய உற்பத்தி செய்து வந்தனர். இவ்வாறு விளைவிக்கும் சிறு தானியங்களான ராகி, சோளம், கம்பு, மக்காச்சோளம், அவரை, துவரை ஆகியவற்றிற்கு தற்போது உரிய லாபம் கிடைக்காததால் விவசாயிகள், வேதனையடைந்துள்ளனர்.



இதனால், சிறுதானியங்கள் உற்பத்தியை விவசாயிகள் கைவிடும் சூழல் உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிறுதானிய உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் மக்காச்சோளம், கம்பு, சோளம் ஆகிய செடிகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்து மனு அளித்தனர். அதில் சிறுதானியம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லாக் கடன் 50 ஆயிரம் வழங்க வேண்டும், விளைவிக்கும் சிறுதானிய பயிர்களை அரசே கூட்டுறவு சங்கங்கள் மூலம் நேரடியாக கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...