கோவையில் அடுக்குமாடி வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க ஒப்புதல்!

கோவை: உக்கடம் கழிவுநீர் பண்ணை அருகே சூரியஒளி மின் உற்பத்தி திட்டத்திற்கும், டி.பி ரோட்டில் நவீன அடுக்குமாடி வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கவும் உயர் மட்டக்குழு நிர்வாக அனுமதி கிடைத்துள்ளது.



கோவை:  உக்கடம் கழிவுநீர் பண்ணை அருகே சூரியஒளி மின் உற்பத்தி திட்டத்திற்கும், டி.பி ரோட்டில் நவீன அடுக்குமாடி வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கவும் உயர் மட்டக்குழு நிர்வாக அனுமதி கிடைத்துள்ளது.

கோவையில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உக்கடம் பெரியகுளம் - வாலாங்குளம் மேம்பாடு மற்றும் டி.பி சாலையில் மாதிரி சாலை அமைக்கும் திட்டங்களுக்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. இந்நிலையில், உக்கடம் பகுதியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில், ரூ.19 கோடி மதிப்பில் 3.2 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரியஒளி மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான திட்டத்திற்கு உயர்மட்ட குழு, நிர்வாக அனுமதி அளித்துள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, மின் கட்டணமாக மாநகராட்சி ஆண்டுதோறும் செலுத்தி வரும் ரூ. 5 கோடி மிச்சமாகும் எனக் கருதப்படுகிறது.

இதேபோல், நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைக் குறைக்க டி.பி.,ரோட்டில் (DB Road) ரூ.42 கோடி மதிப்பில் சுமார் 400 வாகனங்கள் நிறுத்தும் நவீன வசதிகளை கொண்ட அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டு நிர்வாக ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது, இதற்கும் நிர்வாக அனுமதி கிடைத்துள்ளது.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...