கோவை: உக்கடம் கழிவுநீர் பண்ணை அருகே சூரியஒளி மின் உற்பத்தி திட்டத்திற்கும், டி.பி ரோட்டில் நவீன அடுக்குமாடி வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கவும் உயர் மட்டக்குழு நிர்வாக அனுமதி கிடைத்துள்ளது.
கோவை: உக்கடம் கழிவுநீர் பண்ணை அருகே சூரியஒளி மின் உற்பத்தி திட்டத்திற்கும், டி.பி ரோட்டில் நவீன அடுக்குமாடி வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கவும் உயர் மட்டக்குழு நிர்வாக அனுமதி கிடைத்துள்ளது.
கோவையில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உக்கடம் பெரியகுளம் - வாலாங்குளம் மேம்பாடு மற்றும் டி.பி சாலையில் மாதிரி சாலை அமைக்கும் திட்டங்களுக்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன. இந்நிலையில், உக்கடம் பகுதியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில், ரூ.19 கோடி மதிப்பில் 3.2 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட சூரியஒளி மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான திட்டத்திற்கு உயர்மட்ட குழு, நிர்வாக அனுமதி அளித்துள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, மின் கட்டணமாக மாநகராட்சி ஆண்டுதோறும் செலுத்தி வரும் ரூ. 5 கோடி மிச்சமாகும் எனக் கருதப்படுகிறது.
இதேபோல், நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைக் குறைக்க டி.பி.,ரோட்டில் (DB Road) ரூ.42 கோடி மதிப்பில் சுமார் 400 வாகனங்கள் நிறுத்தும் நவீன வசதிகளை கொண்ட அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டு நிர்வாக ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது, இதற்கும் நிர்வாக அனுமதி கிடைத்துள்ளது.