நீலகிரி: உதகை அருகே குடியிருப்பு பகுதிக்குள் கரடி நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி: உதகை அருகே குடியிருப்பு பகுதிக்குள் கரடி நுழைந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

உதகையிலிருந்து எல்ல நள்ளி செல்லும் பகுதியில், மைனலா மற்றும் அல்லஞ்சி செல்லும் குடியிருப்பு பகுதி உள்ளது. அந்த பகுதியில் இன்று அதிகாலை கரடி ஒன்று புகுந்தது.
இதனால் பீதியடைந்த அப்பகுதி மக்கள் பட்டாசுகளை வெடித்து கரடியை விரட்ட முயன்றனர். அப்போது அருகில் இருந்த மரத்தில் ஏறிய கரடி அங்கிருந்து குதித்து விவசாய தோட்டத்தில் புகுந்து மறைந்தது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், வனத்துறையினர் கரடி நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
