"மிஸ் போகாதீங்க மிஸ்": மீண்டும் ஒரு பாசப்போராட்டம் நடத்திய பள்ளி குழந்தைகள்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை இசபெல்லா ஜூலியின் இடமாற்றத்தை எதிர்த்து அந்த அப்பள்ளி மாணவர்கள் அழுது பாச போராட்டத்தை நடத்தினர்.

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியை இசபெல்லா ஜூலியின் இடமாற்றத்தை எதிர்த்து அந்த அப்பள்ளி மாணவர்கள் அழுது பாச போராட்டத்தை நடத்தினர்.

சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியகரம் பகுதி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் பகவான் இடமாற்றத்தைக் கண்டித்து பள்ளி மாணவர்கள் அவரை சூழ்ந்து கொண்டு, அழுது அவரை வெளியேற விடாமல் பாசப்போராட்டம் நடத்தினர்.

இதே போன்ற சம்பவம் தற்போது நாக்கை மாவட்டத்திலும் நடைபெற்றுள்ளது.

பொய்கைநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் உள்பட 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் இங்கு பணியாற்றி வரும் இசபெல்லா ஜூலி என்ற ஆசிரியை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய மாவட்ட கல்வி அலுவலகம் உத்தரவிட்டது.

இந்த இடமாற்றத்துக்கு பள்ளி மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பெற்றோர்களுடன் இணைந்து திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில் ஆசிரியர் குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியும் போராட்டம் நடத்தினர்.

இதே பள்ளியில் அவர் தொடர வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்த மாணவர்கள் ஆசிரியையை சூழ்ந்து கொண்டு, "மிஸ் போகாதீங்க மிஸ்" என்று கூறி கதறி அழுதனர். இதைப் பார்த்த அந்த ஆசிரியையும் கண்ணீர் சிந்தினார்.

இந்த சூழலில், இசபெல்லா ஜூலி அதே பள்ளியில் சில காலத்துக்கு தொடருவார் என்ற வாய்மொழி உத்தரவை அம்மாவட்ட கல்வி அலுவலகம் பிறப்பித்துள்ளது.

மாணவர்களின் இந்த பாசப் போராட்டம் அப்பள்ளி ஆசியர்களையும், ஊர் மக்களையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...