பவானியாற்றில் இரவு நேரத்தில் சிக்கி கொண்ட கல்லூரி மாணவர்கள்: போராடி மீட்டது தீயணைப்புத்துறை

கோவை: பவானியாற்றில் இரவு நேரத்தில் சிக்கித்தவித்த பதினோரு கல்லூரி மாணவர்களை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர்.

கோவை: பவானியாற்றில் இரவு நேரத்தில் சிக்கித்தவித்த பதினோரு கல்லூரி மாணவர்களை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர்.



கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி என்னும் பகுதியில் பவானியாற்றில் நேற்று குளிக்க சென்ற தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பதினோரு பேர், ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுழலில் சிக்கி ஆற்றின் மறு கரையில் கரையேறியுள்ளனர். 

ஆற்றின் வேகம் அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பல மணி நேரமாக ஆற்றைக்கடந்து வர இயலாமல் போராடினர். நேரம் ஆக-ஆக இருள் சூழ தொடங்கியதால் அச்சத்தில் ஆழ்ந்த மாணவர்கள் பலத்த சப்தம் எழுப்பியும், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தும் உதவி கோரினர். 

இது குறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் மாணவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் இறங்கினர். 

மாணவர்கள் இருந்த ஆற்றின் மறுகரை வனப்பகுதி என்பதாலும், இருள் சூழ்ந்த பின்னர் யானைகள் அங்கு நீர் அருந்த வந்ததாலும் அவர்களை மீட்பு படையினர், உள்ளூர் மக்களின் உதவியோடு மீட்க முடிவெடுத்தனர். ஆற்றின் வேகம் ஓரளவு குறைந்தவுடன் பரிசலின் உதவியோடு பிரவீன், கிள்ளிவளவன், முத்துகிருஷ்ணன், விவேக், கார்த்தி, இளமாறன், லெனின், அஜய்பிரவீன், தினேஷ்ராஜ், பிரனிஸ், ராஜ்குமார் என்ற பதினோரு மாணவர்களையும் இரவு பத்து மணியளவில் பத்திரமாக மீட்டனர். 



பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக பவானியாற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் போது தீடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும், அணையின் நீர் திறக்கப்படும் முன் உரிய முன்னெச்சரிக்கை அறிவிப்பு இல்லாத காரணத்தினால் இது போன்ற சம்பவங்கள் ஏற்படுவதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...