மேட்டுப்பாளையத்தில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்து மினி மாரத்தான்

கோவை: மேட்டுப்பாளையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தியும் பிளாஸ்டிக் இல்லா மாற்று நடவடிக்கைக்கு பொதுமக்கள் மாற வேண்டி மாணவ-மாணவிகள் இன்று மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடத்தினர்.

கோவை: மேட்டுப்பாளையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தியும் பிளாஸ்டிக் இல்லா மாற்று நடவடிக்கைக்கு பொதுமக்கள் மாற வேண்டி மாணவ-மாணவிகள் இன்று மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடத்தினர்.



மக்காத பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இச்சட்டம் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமுலுக்கு வரும் நிலையில், பிளாஸ்டிக் இல்லா மாற்று நடவடிக்கைக்கு மாற வேண்டிய நேரமிது என்பதை வலியுறுத்தியும், இயற்கை சூழலுக்கு பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மேட்டுப்பாளையத்தில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்ற 'க்ராஸ் கன்ட்ரி ரேஸ்' என்னும் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடத்தப்பட்டது. 



சுவாமி சச்சிதானந்தா ஜோதி நிக்கேதன் பள்ளி சார்பில் இன்று காலை நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு மாரத்தான் பந்தயத்தை கவிஞர் கவிதாசன் மற்றும் காவல்துறை ஆய்வாளர் சென்னகேசவன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அண்மையில் திருப்பூரில் பிளாஸ்டிக் இல்லா திருமண நிகழ்ச்சி நடைபெற்றதை மாணவர்கள் மத்தியில் சுட்டிக்காட்டி பேசிய கவிதாசன், "இது போல நாம் அனைவரும் நம் இல்லங்களில் இருந்து பிளாஸ்டிக் ஒழிப்பைத் தொடங்க முன்வர வேண்டும்." என்றார். 

மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் தொடங்கிய இந்த மராத்தான், நீலகிரி மலையடிவாரமான கல்லார் வரை சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது. இறுதியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...