அரசு பள்ளியில் படித்த ஒரேயொரு மாணவனுக்கு மருத்துவ இடம்

கடலூர்: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவனுக்கு மட்டுமே தமிழகத்தில் மருத்துவப் படிப்பு பயில்வதற்கான இடம் கிடைத்துள்ளது.

கடலூர்: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவனுக்கு மட்டுமே தமிழகத்தில் மருத்துவப் படிப்பு பயில்வதற்கான இடம் கிடைத்துள்ளது. 

சென்னையில் கடந்த ஜுலை 1-ம் தேதி தொடங்கிய மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு வரும் 10 வரை நடக்கிறது. இதில், தமிழகம் முழுவதும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர். அரசுப் பள்ளிகளைக் காட்டிலும், தனியார் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கே அதிகம் மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், அரசுப் பள்ளியில் பயின்ற ஒரேயொரு மாணவனுக்கு மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைத்திருப்பது அனைவரிடத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் மு. பொடையூர் கிராமத்தைச் சேர்ந்த சத்துணர்வு ஊழியர் ரங்கராஜன் என்பவரின் மகன் அலெக்ஸ் பாண்டியன். இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து பிளஸ்-2 தேர்வில் 1.111 மதிப்பெண்கள் பெற்றார். பின்னர், சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட நீட் தேர்வு பயிற்சியில் கலந்து கொண்டு, பயிற்சி பெற்றார். அதன் விளைவாக, நீட் தேர்வில் 306 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்தார். இதைத் தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்ட அலெக்ஸ் பாண்டியனுக்கு, திருச்சியில் உள்ள கே.ஏ.பி.வி., அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதன்மூலம், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...