உதகையில் 12 ஆண்டு கால உழைப்பில் உருவான நூல் பூங்கா : பொதுமக்கள் வரவேற்பு

நீலகிரி: உதகை படகு இல்லம் எதிரே 10 ஆயிரம் சதுர அடியில், நூல் மலர்களால் ஆன உலகின் முதல் நூல் பூங்காவை வடிவமைத்துள்ளார் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அண்டனி ஜோசப்.


நீலகிரி: உதகை படகு இல்லம் எதிரே 10 ஆயிரம் சதுர அடியில், நூல் மலர்களால் ஆன உலகின் முதல் நூல் பூங்காவை வடிவமைத்துள்ளார் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அண்டனி ஜோசப்.

உள்ளரங்கில் அமைக்கப்பட்டு தோட்டத்தினுள் நுழைந்தால், வண்ண வண்ண மலர்கள் நம்மை வரவேற்கின்றன. நடைபாதையை ஒட்டிய புல்வெளி, மலர் தொட்டிகளில் தொங்கும் மலர்கள், குளத்தில் மதிக்கும் தாமரைகள் பார்வையாளர்களை வசீகரிக்கின்றன.

அங்குள்ள மலர்கள், தாவரங்கள் மற்றும் புல்வெளிகள் அனைத்தும் நூலால் வடிவமைக்கப்பட்டவை என பூங்கா ஊழியர்கள் கூறினாலும், நம் மனது அதை நம்ப மறுக்கிறது. பூங்கா ஊழியர்கள், அனைத்து மலர்கள் குறித்தும், அவற்றை உருவாக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்தும் விளக்குகின்றனர்.

12 ஆண்டு உழைப்பு

பூங்காவை வடிவமைக்க 12 ஆண்டுகள், 50 திறமையான பெண்களின் உழைப்பு தேவைப்பட்டிருக்கிறது. பூங்கா நிறுவனர் அண்டனி ஜோசப், தனது கலை தாகம் குறித்து நம்மிடம் கூறியதாவது:- 

எனக்கு கலை மீது தீராத தாகம். ஓவியம், சிற்பம் வடிவமைத்துக் கொண்டிருந்தேன். கேரளாவில் 80-களில் கோட்ஸ் வயலா லிமிடெட் நூல் நிறுவனத்தின் சார்பில் நடந்த கண்காட்சியில், நூலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கலை பொருட்களை காட்சிப்படுத்தினேன்.



அதற்கு கிடைத்த வரவேற்பும், அந்த நிறுவனத்தார் கொடுத்த ஊக்கத்தால் இயந்திர உதவி இல்லாமல், கைகளைக் கொண்டே நூல் பயன்படுத்தி கலை பொருட்கள் தயாரிக்க முடிவு செய்தேன். கடந்த 1988-ம் ஆண்டு, 9 உறுப்பினர்கள் கொண்டு எனது ஆய்வைத் தொடங்கினேன். 

மலர்கள் மற்றும் தாவரங்களை அவற்றின் அசல் தன்மை மாறாமல் வடிவமைக்கத் தொடங்கினேன். இறைவன் அருளால் நவம்பர் கடந்த 2002-ம் ஆண்டு நூல் மலர்களைக் கொண்ட தோட்டம் அமைக்க முடிந்தது. 50 திறமையான பெண்களின் 12 ஆண்டுகள் அயராத உழைப்பினால் உதகையில் உலகின் முதல் நூல் பூங்காவை அமைக்கப்பட்டது. 



தோட்டத்தில் உள்ள மலர்கள், தாவரங்கள், புல்வெளி அனைத்தும் நூல்களைக் கொண்டு கைகளாலேயே வடிவமைக்கப்பட்டன. இதற்காக, 6 கோடி மீட்டர் நூல் பயன்படுத்தப்பட்டது. தண்டுகளை கம்பியாலும், மலர்களின் இதழ்கள் மற்றும் இலைகள் சட்டை காலரில் பயன்படுத்தப்படும் கேன்வஸ் பயன்படுத்தி வடிவமைத்து, பின்னர் மலரின் நிறத்திலான நூலைக் கொண்டு மலர்கள் வடிவமைக்கப்பட்டன.



இந்த பூங்காவில், 150 ரக தாவரங்களின் மாதிரிகள் உள்ளன. இதில், குறிப்பிடத்தக்கவை நீலகிரி குறிஞ்சி, ஆர்கிட் மலர்கள்.



இந்த அதிசய பூங்காவை காண தற்போது உலகெங்கிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். தற்போது இந்த நூல் பூங்கா தமிழ்நாடு புக் ஆஃப் ரிகார்ட்ஸ் மற்றும் யூனிக் வர்ல்டு ரிகார்ட்ஸ் புத்தகங்களில் இடம் பிடித்துள்ளது.

என்று கூறி முடித்தார்.

பராமரிப்பு சிரமம்

பூங்கா பாராமரிப்பு அதன் பொறுப்பாளர் கூறுகையில், "காலநிலை மாற்றத்தால் நூலின் நிறம் மங்கி விடும் என்பதால், உள்ளரங்கில் குறிப்பிட்ட ஒளி அமைக்கப்பட்டுள்ளது. மலர்கள் மீது தூசு படிந்து விடும் என்பதால், தூசு ஏற்படாமல் எந்நேரமும் தண்ணீர் தெளித்து, சுத்தமாக பராமரிக்க வேண்டும். 



பூங்காவை பராமரிக்க மூன்று பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான ஊதியம், பராமரிப்பு செலவு அனைத்துமே, சுற்றுலாப் பயணிகளை நம்பியே உள்ளது. நுழைவுக் கட்டணம் தான் பூங்காவின் வருமானம். 

கோடை காலம் மற்றும் இரண்டாம் பருவ காலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆண்டின் நான்கு மாதம் மட்டுமே வருவாய் கிடைக்கும். மேலும், நூலைக் கொண்டு பரிசுப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறோம். 



இந்த வருவாயைக் கொண்டு பூங்காவை ஆண்டு முழுவதும் பராமரிக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து விட்டால் பூங்காவை பராமரிப்பது கேள்விக்குறியாகிவிடும். ஆண்டனி ஜோசப்பின் கலை தாகம் காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக இந்த பூங்கா பராமரிக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்து படைத்து வருகிறது." என்றார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...