நீலகிரி ப்ரீமியம் சிறப்பு மலை ரயிலில் நவீன வசதியுடன் கூடிய புதிய ரயில்பெட்டி அறிமுகம்

நீலகிரி: நவீன வசதிகளுடன் கூடிய புதிய ரயில் பெட்டி நீலகிரியில் சீசன் சமயங்களில் இயக்கப்படும் ப்ரீமியம் சிறப்பு மலை ரயிலில் அறிமுகம் செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

நீலகிரி: நவீன வசதிகளுடன் கூடிய புதிய ரயில் பெட்டி நீலகிரியில் சீசன் சமயங்களில் இயக்கப்படும் ப்ரீமியம் சிறப்பு மலை ரயிலில் அறிமுகம் செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி காலை 7.10 மணிக்கு நான்கு பெட்டிகளுடன் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 200 இருக்கை வசதி கொண்ட இந்த ரயிலில் முதல் வகுப்பு கட்டணம் ரூ. 120-ம், இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ. 30-ம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சீசன் சமயங்களில், வார விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதல் கட்டணத்துடன் ப்ரீமியம் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டது. இதில், முதல் வகுப்பு கட்டணம் 1,100 ரூபாயும், இரண்டாம் வகுப்பு கட்டணம் 800 ரூபாய் வசூலிக்கப்பட்டது. 



சுமார் பத்து மடங்கிற்கும் மேலாக சிறப்பு ரயிலில் கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்டாலும் சுற்றுலா பயணிகள், எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் வழக்கமான பெட்டிகளிலேயே பயணம் செய்தனர். இது அதிக கட்டணம் செலுத்தி பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைக் கருத்தில் கொண்டு பிரிமீயம் ரயிலில் பழைய இருக்கைகளை மாற்றிவிட்டு புதிய புஷ்பேக் இருக்கைகள் (28 இருக்கைகள்) பொருத்தப்பட்ட பெட்டி திருச்சியில் உள்ள பொன்மலை ரயில்வே பணிமலையில் தயார் செய்யப்பட்டது. லக்கேஜ் வைக்க வசதி, இருக்கையில் அமர்ந்து சாப்பிடவும், தண்ணீர் பாட்டில்கள் வைப்பதற்கான ஸ்டேண்டு என இந்த புதுப்பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயில் பெட்டி தற்போது திருச்சியில் இருந்து மேட்டுப்பாளையம் ரயில்நிலையம் வந்தடைந்துள்ளது. கிரேன் மூலம் இறக்கப்பட்ட இந்த சிறப்பு மலை ரயில் பெட்டி விரைவில் பயணிகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...