மலர் சாகுபடி செய்யக் கடன் வழங்கியதில் மோசடி : சி.பி.ஐ., விசாரணை

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் மலர் சாகுபடி செய்யக் கடன் வழங்கியதில் நிகழ்ந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ தீவிர விசாரணையை நடத்தி வருகிறது.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் மலர் சாகுபடி செய்யக் கடன் வழங்கியதில் நிகழ்ந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ தீவிர விசாரணையை நடத்தி வருகிறது. 

நீலகிரியில் தேயிலைக்கு மாற்றுப் பயிராக மலர் சாகுபடி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் 5% மானியத்தை வழங்குகின்றன. மேலும், வங்கிகள் மூலமும் கடன்கள் வழங்கப்படுகின்றன. இத்தகைய திட்டத்தின் மூலம் உதகையிலுள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியும் கடன் வழங்கி வருகிறது. 



இக்கடன் பெறுவதற்காக கிரவுன் புளோரி டெக் என்ற அமைப்பின் உரிமையாளர் ராஜன் வங்கி மேலாளர் சிவகுமாரை அணுகி விவசாயிகளுக்கு மலர் சாகுபடிக்காக பசுமை குடில் அமைக்கக் கடன் கேட்டுள்ளார். இதற்கான ஆவணங்களையும் அவர் அளித்துள்ளார். அதன்படி, வங்கி விதிமுறைகளை மீறி 58 பேருக்கு ரூ.24.75 இலட்சம் கடன் வழங்கியுள்ளார். அதேவேளையில், கிரவுன் புளோரி டெக் மூலம் எந்த விவசாயும் பயனடையவில்லை என்றும், இதனால் வங்கிக்கு ரூ. 14.36 இலட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. 

அதன்பேரில், இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வருகிறது. வங்கியின் முன்னாள் மேலாளர் சிவக்குமார் மற்றும் கிரவுன் புளோரி டெக் உரிமையாளர் ராஜன் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது. இதுகுறித்து தற்போதைய மேலாளரிடம் கேட்ட பொழுது விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...