ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சாலைக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

நீலகிரி : உதகையில் அமைந்துள்ள ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சாலைக்கு மீண்டும் மின் இணைப்பை வழங்கக்கோரி ஸ்டெர்லிங் பயோடெக் தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி : உதகையில் அமைந்துள்ள ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சாலைக்கு மீண்டும் மின் இணைப்பை வழங்கக்கோரி ஸ்டெர்லிங் பயோடெக் தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த சாண்டிநல்லா பகுதியில் கடந்த 45 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஸ்டெர்லிங் பயோடெக் தொழிற்சாலையில் மருத்துவத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில். இத்தொழிற்சாலையில் இருந்து சுத்திகரிக்கப்படாத ரசாயனம் கலந்த கழிவு நீர் பைக்காரா அணையில் கலந்து வந்தது. இதனால். பைக்காரா குடிநீர் திட்டத்தின் கீழ், அந்த நீரை குடிநீராகப் பயன்படுத்த முடியாமலும், மீறிப் பயன்படுத்தினால் பொதுமக்களுக்கு நோய் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பலமுறை இந்தத் தொழிற்சாலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், அதன் மீது எந்தவித நடவடிக்கையும் தொழிற்சாலை நிர்வாகம் எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 28-ம் தேதி தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், இத்தொழிற்சாலை நிர்வாகம் எந்தவொரு அறிவிப்பும் இன்றி தொழிலாளர்களை வெளியேற்றி உள்ளதால் சுமார் 400 தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருவதாகக் கோரி இன்று உதகை ஏ.டி.சி., சுதந்திர திடல் முன்பு ஸ்டெர்லிங் பயோடெக் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...