டாஸ்மாக் தகராறில் ஈடுபட்ட மூன்று பேர் கைது: 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை: கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி அருகே டாஸ்மார்க்கில் தகராறில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 3 பேரில் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.


கோவை: கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி அருகே டாஸ்மார்க்கில் தகராறில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 3 பேரில் இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

காமராஜர்புரத்தைச் சேர்ந்த கௌதம் (24), கண்ணப்பன் நகர் சேர்ந்த சுஜி மோகன் (25), கணபதியைச் சேர்ந்த பிரவின் (23) ஆகியோர் கடந்த மாதம்  7-ம் தேதி சின்னவேடம்பட்டியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது அருந்தச் சென்றனர். அவர்கள் அங்கிருந்த சிவா என்பவரிடம் மதுபானம் கேட்டு தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு சென்றுவிட்டனர்.

இந்த புகாரின்பேரில் போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதில் கௌதம், சுஜிமோகன் ஆகிய 2 பேர் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருப்பது தெரியவந்தது. எனவே, அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் ஆணையர் பெரியய்யாவுக்கு சரவணம்பட்டி போலீசார் பரிந்துரை செய்தனர். இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் ஆணையர் பெரியய்யா உத்தரவிட்டார். அதன்படி, கோவை மத்திய சிறையில் இருக்கும் கௌதம் மற்றும் சுஜிமோகன் ஆகியோரிடம் அதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...