வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள அட்டக்கட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் பழங்குடி மக்களுக்கு நறுமண பயிர்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள அட்டக்கட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் பழங்குடி மக்களுக்கு நறுமண பயிர்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

அட்டக்கட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் சி.எஸ்.ஐ.ஆர்., மருத்துவமனை மற்றும் நறுமண தாவர ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக நறுமண பயிர்களில் இருந்து நறுமண எண்ணெய் தயாரிப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சி பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில், லெமன்கிராஸ் என்று அழைக்கப்படும் நறுமண தாவரத்தில் இருந்து நறுமண எண்ணெய் பெறப்பட்டு, சோப், வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகிறது. மேலும், லெமன்கிராஸ் நறுமண தாவரத்தை எவ்வாறு பயிரிடுவது, பராமரிப்பது, அறுவடை செய்வது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
லெமன்கிராஸ் நறுமண தாவரம் இந்தியா முழுவதும் பெருமளவு பயிரிடப்படுவதாகவும், 3 முதல் 4 அறுவடையின் மூலம் வருடத்திற்கு ஒரு ஏக்கரில் 120 கிலோ நறுமண எண்ணெய் பெறலாம். வருடத்திற்கு நறுமண எண்ணெயின் மூலம் ஒரு ஏக்கரில் ரூ. 1,50,000 வரை பெறலாம் என முகாமில் தெரிவித்தனர்.

இம்முகாமில் திருப்பூர், பொள்ளாச்சி, வால்பாறை வனக்கோட்டத்திற்குட்பட்ட காடம்பாறை, கருமுட்டி, வெள்ளிமுடி, பூச்சிகுத்தான்பாறை, குழிப்பட்டி, குருமலை, மாவடப்பு, காட்டுப்பட்டி போன்ற செட்டில்மெண்ட் பகுதியில் இருந்து 150-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் கலந்து கொண்டனர்.


அட்டக்கட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் சி.எஸ்.ஐ.ஆர்., மருத்துவமனை மற்றும் நறுமண தாவர ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக நறுமண பயிர்களில் இருந்து நறுமண எண்ணெய் தயாரிப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சி பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில், லெமன்கிராஸ் என்று அழைக்கப்படும் நறுமண தாவரத்தில் இருந்து நறுமண எண்ணெய் பெறப்பட்டு, சோப், வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகிறது. மேலும், லெமன்கிராஸ் நறுமண தாவரத்தை எவ்வாறு பயிரிடுவது, பராமரிப்பது, அறுவடை செய்வது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
லெமன்கிராஸ் நறுமண தாவரம் இந்தியா முழுவதும் பெருமளவு பயிரிடப்படுவதாகவும், 3 முதல் 4 அறுவடையின் மூலம் வருடத்திற்கு ஒரு ஏக்கரில் 120 கிலோ நறுமண எண்ணெய் பெறலாம். வருடத்திற்கு நறுமண எண்ணெயின் மூலம் ஒரு ஏக்கரில் ரூ. 1,50,000 வரை பெறலாம் என முகாமில் தெரிவித்தனர்.

இம்முகாமில் திருப்பூர், பொள்ளாச்சி, வால்பாறை வனக்கோட்டத்திற்குட்பட்ட காடம்பாறை, கருமுட்டி, வெள்ளிமுடி, பூச்சிகுத்தான்பாறை, குழிப்பட்டி, குருமலை, மாவடப்பு, காட்டுப்பட்டி போன்ற செட்டில்மெண்ட் பகுதியில் இருந்து 150-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் கலந்து கொண்டனர்.
