பழங்குடி மக்களுக்கு நறுமண பயிர்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள அட்டக்கட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் பழங்குடி மக்களுக்கு நறுமண பயிர்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ள அட்டக்கட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் பழங்குடி மக்களுக்கு நறுமண பயிர்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



அட்டக்கட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் சி.எஸ்.ஐ.ஆர்., மருத்துவமனை மற்றும் நறுமண தாவர ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக நறுமண பயிர்களில் இருந்து நறுமண எண்ணெய் தயாரிப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சி பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில், லெமன்கிராஸ் என்று அழைக்கப்படும் நறுமண தாவரத்தில் இருந்து நறுமண எண்ணெய் பெறப்பட்டு, சோப், வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகிறது. மேலும், லெமன்கிராஸ் நறுமண தாவரத்தை எவ்வாறு பயிரிடுவது, பராமரிப்பது, அறுவடை செய்வது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. 

லெமன்கிராஸ் நறுமண தாவரம் இந்தியா முழுவதும் பெருமளவு பயிரிடப்படுவதாகவும், 3 முதல் 4 அறுவடையின் மூலம் வருடத்திற்கு ஒரு ஏக்கரில் 120 கிலோ நறுமண எண்ணெய் பெறலாம். வருடத்திற்கு நறுமண எண்ணெயின் மூலம் ஒரு ஏக்கரில் ரூ. 1,50,000 வரை பெறலாம் என முகாமில் தெரிவித்தனர். 



இம்முகாமில் திருப்பூர், பொள்ளாச்சி, வால்பாறை வனக்கோட்டத்திற்குட்பட்ட காடம்பாறை, கருமுட்டி, வெள்ளிமுடி, பூச்சிகுத்தான்பாறை, குழிப்பட்டி, குருமலை, மாவடப்பு, காட்டுப்பட்டி போன்ற செட்டில்மெண்ட் பகுதியில் இருந்து 150-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...