கோவை: கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
கோவை: கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழைக் காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. மேலும், சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தற்போதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் முக்கிய ஒன்றாகத் திகழும் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த ஜுன் மாதம் 9-ம் தேதி முதல் 17 நாட்கள் பொதுமக்கள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. பின்னர், 21-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது.
கோவை குற்றால அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்ததாலும், பராமரிப்புப் பணிகள் காரணமாகவும் மீண்டும் 24-ம் தேதி கோவை குற்றாலம் அடைக்கப்பட்டது. பின்னர், கடந்த செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டதாகவும், மீண்டும் அடைக்கப்பட்டதாகவும் வெளியான தகவல்களால் சுற்றுலாப் பயணிகள் குழப்பமடைந்தனர். இந்த நிலையில், ஒருவாரத்திற்குப் பின் குற்றாலம் அருவியில் நீர்வரத்து குறைந்த நிலையில் கடந்த 05-ம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வனத்துறை அனுமதி அளித்தது.
இந்த நிலையில், நள்ளிரவு முதல் சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், கோவை குற்றாலத்தின் அருவியில் தடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கோவை குற்றால அருவியில் குளிக்க வனத்துறை மீண்டும் தடை விதித்துள்ளது. கடந்த சில நாட்களாகக் கோவை குற்றால அருவி திறக்கப்படுவதும், மூடப்படுவதுமாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தென்மேற்குப் பருவமழைக் காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. மேலும், சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தற்போதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் முக்கிய ஒன்றாகத் திகழும் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த ஜுன் மாதம் 9-ம் தேதி முதல் 17 நாட்கள் பொதுமக்கள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. பின்னர், 21-ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டது.
கோவை குற்றால அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்ததாலும், பராமரிப்புப் பணிகள் காரணமாகவும் மீண்டும் 24-ம் தேதி கோவை குற்றாலம் அடைக்கப்பட்டது. பின்னர், கடந்த செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டதாகவும், மீண்டும் அடைக்கப்பட்டதாகவும் வெளியான தகவல்களால் சுற்றுலாப் பயணிகள் குழப்பமடைந்தனர். இந்த நிலையில், ஒருவாரத்திற்குப் பின் குற்றாலம் அருவியில் நீர்வரத்து குறைந்த நிலையில் கடந்த 05-ம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வனத்துறை அனுமதி அளித்தது.
இந்த நிலையில், நள்ளிரவு முதல் சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், கோவை குற்றாலத்தின் அருவியில் தடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், கோவை குற்றால அருவியில் குளிக்க வனத்துறை மீண்டும் தடை விதித்துள்ளது. கடந்த சில நாட்களாகக் கோவை குற்றால அருவி திறக்கப்படுவதும், மூடப்படுவதுமாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.