பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கு இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா விருது

மேட்டுப்பாளையம்: மறைந்த பாலமுரளி கிருஷ்ணாவின் 88-வது பிறந்த நாளையொட்டி, பாடகி பி.சுசீலாவிற்கு “பாலமுரளி நாத மகோத்சவ்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம்: மறைந்த பாலமுரளி கிருஷ்ணாவின் 88-வது பிறந்த நாளையொட்டி, பாடகி பி.சுசீலாவிற்கு “பாலமுரளி நாத மகோத்சவ்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற விழாவில் மறைந்த இசை மேதை பாலமுரளிகிருஷ்ணாவின் பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்படும் “பாலமுரளி நாத மகோத்சவ்” விருது பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

தனது இசை திறமையால் பெரிதும் போற்றப்பட்டு நாட்டின் உயரிய விருதான பத்மவிபூஷன் விருதை பெற்ற டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் பெயரில், ஆண்டுதோறும் அவரது நினைவு அறக்கட்டளை சார்பில் இசைத்துறையை சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. இன்று அவரது 88-வது பிறந்த தினத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் அவரது பெயரிலான “டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா கலையரங்கம்” என்ற ஆடிட்டோரியம் திறந்து வைக்கப்பட்டது. இதனை பிரபல நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் பாலமுரளிகிருஷ்ணா குழுவினரின் கர்நாடக இசை கச்சேரி நடத்தப்பட்டது. பின்னர், நடைபெற்ற விழாவில் 2018-ம் ஆண்டிற்கான “பாலமுரளி நாத மகோத்சவ்” விருது பிரபல பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கு வழங்கப்பட்டது. இவ்விருதினை மூத்த இசைக்கலைஞர் டாக்டர் டி.வி.கோபாலகிருஷ்ணன் வழங்கினார். பாலமுரளிகிருஷ்ணா தங்களது இசைகுரு என தெரிவித்து அவரது சாதனைகள் குறித்து பத்மா சுப்பிரமணியம் மற்றும் பி.சுசீலா ஆகியோர் பேசினர். 

நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களிடம் பி.சுசீலா பேசிய போது, மறைந்த பாலமுரளிகிருஷ்ணாவுடன் இணைந்து பாடிய தமிழ் திரைப்பாடலான “தங்கரதம் வந்ததே” என்ற என்ற பாடலின் சில வரிகளை பாடினார்.



Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...