கோவை சங்கமேஸ்வரர் கோவிலில் தடையை மீறி விளக்கேற்றிய பா.ஜ.க.,வினர்: போலீஸ் குவிப்பால் பரபரப்பு

கோவை: கோவில்களில் விளக்கேற்றக்கூடாது என்ற இந்து அறநிலையத்துறை உத்தரவைக் கண்டித்து கோவை சங்கமேஸ்வரர் கோவிலில் தடையை மீறி பா.ஜ.க.,வினர் விளக்கேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவில்களில் விளக்கேற்றக்கூடாது என்ற இந்து அறநிலையத்துறை உத்தரவைக் கண்டித்து கோவை சங்கமேஸ்வரர் கோவிலில் தடையை மீறி பா.ஜ.க.,வினர் விளக்கேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.



மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட தீ விபத்து குறித்து ஆராய்ந்த விசாரணை கமிஷன், கோவில்களில் விளக்கேற்றவும், கற்பூரம் கொளுத்தவும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவுறுத்தியது.

இதையடுத்து, கோவில்களில் விளக்கேற்றவும், கற்பூரங்கள் கொளுத்தவும் தடை விதித்து இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், இந்த தடையை கண்டித்து தடை மீறி விளக்கேற்றும் போராட்டத்தில் பா.ஜ.க.,வினர் ஈடுபட்டனர். 

பிரதோஷ தினமான இன்று கோட்டைமேடு பகுதியில் உள்ள சங்கமேசுவரர் ஆலயத்திற்கு வந்த 50-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.,வினர் தடையை மீறி நெய் விளக்குகளை ஏற்ற முயன்றனர். அப்போது அங்கு வந்த அறநிலையத்துறை அதிகாரிகள் விளக்குகள் ஏற்றி வைக்க தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியதை அடுத்து பா.ஜ.க.,வினர் அங்கு சென்று விளக்கேற்றினர்.



இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன், "இந்துக்களின் நம்பிக்கையான விளக்கேற்றும் முறைக்கு தடை விதிக்கக் கூடாது. பாதுகாப்பு காரணமாக இருந்தால் விளக்கேற்ற தனி இடம் கோவில்களில் ஒதுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக, அனைத்து கோவில்களிலும் பா.ஜ.க.,வினர் நேரில் ஆய்வு நடத்துவார்கள். எந்த கோவிலிலாவது தடை விதிக்கப்பட்டால், தடை நீக்கம் தொடர்பாக தமிழக அரசுக்கு வலியுறுத்தப்படும். தடையை மீறியதற்காக காவல் துறையினர் வழக்குப் பதிந்தால் அதனை எதிர்கொள்ளத் தயார்." என்றார்.

பா.ஜ.க.,வினரின் இந்த திடீர் போராட்டத்தை அடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...